குறள் 112

நடுவு நிலைமை

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து

seppam utaiyavan aakkachiithaivinri yechchaththitr
yechchaththitr kaemaappu utaiththu


Shuddhananda Bharati

Equity

Wealth of the man of equity
Grows and lasts to posterity.


GU Pope

Impartiality

The just man's wealth unwasting shall endure,
And to his race a lasting joy ensure.

The wealth of the man of rectitude will not perish, but will bring happiness also to his posterity.


Mu. Varadarajan

நடுவுநிலைமை உடையவனின்‌ செல்வவளம்‌ அழிவில்லாமல்‌ அவனுடைய வழியிலுள்ளார்க்கும்‌ உறுதியான நன்மை தருவதாகும்‌.


Parimelalagar

செப்பம் உடையவன் ஆக்கம்-நடுவு நிலைமையை உடையவனது செல்வம்; சிதைவு இன்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து-பிறர் செல்வம் போல அழிவு இன்றி அவன் வழியிலுள்ளார்க்கும் வலியாதலை உடைத்து.
விளக்கம்:
(விகாரத்தால் தொக்க எச்ச உம்மையான் இறக்கும் துணையும் அவன்றனக்கும் ஏமாப்பு உடைத்து என்பது பெற்றாம். அறத்தோடு வருதலின், அன்னதாயிற்று. தான் இறந்துவழி எஞ்சி நிற்பதாகலின் 'எச்சம்' என்றார்.)


Manakkudavar

(இதன் பொருள்) நடுவு நிலைமை யுடையவனது செல்வம் தன்னளவிலுங் கேடின் றியே நின்று, தன் வழியுள்ளார்க்குங் கேடுவாராமற் காவலாதலையுடைத்து, (எ-று). நடுவு நிலைரையுடையார் செல்வம் அழியாதென்றவாறு.