குறள் 1108

புணர்ச்சிமகிழ்தல்

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு

veelum iruvarkku inithae valiyitai
polap pataaa muyakku


Shuddhananda Bharati

Embrace bliss

Joy is the fast embrace that doth
Not admit e'en air between both.


GU Pope

Rejoicing in the Embrace

Sweet is the strict embrace of those whom fond affection binds,
Where no dissevering breath of discord entrance finds.

To ardent lovers sweet is the embrace that cannot be penetrated even by a breath of breeze.


Mu. Varadarajan

காற்று இடையறுத்துச்‌ செல்லாதபடி தழுவும்‌ தழுவுதல்‌, ஒருவரை ஒருவர்‌ விரும்பிய காதலர்‌ இருவர்க்கும்‌ இனிமை உடையதாகும்‌.


Parimelalagar

'ஒத்த அன்புடைய நுமக்கு ஒரு பொழுதும் விடாத முயக்கமே இனியது' என வரைவுகடாய தோழிக்குச் சொல்லியது.
விளக்கம்:
(நீ சொல்லுகின்ற தொக்கும்) வளி இடை போழப்படா முயக்கு - ஒரு பொழுதும் நெகிழாமையின் காற்றால் இடையறுக்கப்படாத முயக்கம்; வீழும் இருவர்க்கு இனிதே - ஒருவரையொருவர் விழைவார் இருவர்க்கும் இனிதே.. (முற்று உம்மை விகாரத்தால் தொக்கது. ஏகாரம் தேற்றத்தின்கண் வந்தது. 'ஈண்டு இருவர் இல்லை இன்மையான், இஃது ஒவ்வாது' என்பது கருத்து. களவிற் புணர்ச்சியை மகிழ்ந்து வரைவு உடன்படான் கூறியவாறு.)


Manakkudavar

(இதன் பொருள்) ஒத்த காதலுடையா ரிருவர்க்கும் இனிதாம் ; காற்றால் இடை யறுக்கப்படாத முயக்கம்,
(என்றவாறு) இது புணர்ச்சி விருப்பினால் கூறினமையால், புணர்ச்சி மகிழ்தலாயிற்று. இது குறிப்பினால் புகழ்ந்தது.