குறள் 1107

புணர்ச்சிமகிழ்தல்

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு

thammil irundhthu thamathupaaththu undatrraal
ammaa arivai muyakku


Shuddhananda Bharati

Embrace bliss

Ah the embrace of this fair dame
Is like sharing one's food at home.


GU Pope

Rejoicing in the Embrace

As when one eats from household store, with kindly grace
Sharing his meal: such is this golden maid's embrace.

The embraces of a gold-complexioned beautiful female are as pleasant as to dwell in one's own houseand live by one's own (earnings) after distributing (a portion of it in charity).


Mu. Varadarajan

அழகிய மாமை நிறம்‌ உடைய இவளுடைய தழுவுதல்‌, தம்முடைய வீட்டிலிருந்து தாம்‌ ஈட்டிய பொருளைப்‌ பகுத்துக்‌ கொடுத்து உண்டாற்‌ போன்றது.


Parimelalagar

'இவளை நீ வரைந்துகொண்டு உலகோர் தம் இல்லிருந்து தமது பாத்துண்ணும் இல்லறத்தோடு படல் வேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது. அம் மா அரிமை முயக்கு அழகிய மாமை நிறத்தையுடைய அரிவையது முயக்கம். தம்மில் இருந்து தமது பாத்து உண்டற்று - இன்பம் பயத்தற் கண் தமக்குரிய இல்லின் கண் இருந்து உலகோர் தம் தாளான் வந்த பொருளைத் தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல்கட்குப் பகுத்துத் தம் கூற்றை உண்டாற் போலும்.
விளக்கம்:
(தொழில் உவமம். 'இல்லறஞ்செய்தார் எய்தும் துறக்கத்து இன்பம் எனக்கு இப்புணர்ச்சியே தரும்' என வரைவு உடன்படான் கூறியவாறாயிற்று.)


Manakkudavar

(இதன் பொருள்) தம்மிடத்திலேயிருந்து, தமது தாளாண்பையால் பெற்ற பொருளை இல்லாதார்க்குப் பகுத்து உண்டாற்போலும் ; அழகிய மாமை நிறத் தினையுடைய அரிவை முயக்கம்,
(என்றவாறு).