குறள் 1106

புணர்ச்சிமகிழ்தல்

உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்

uruthoru uyirthalirppath theendalaal paethaikku
amilthin iyanrana thol


Shuddhananda Bharati

Embrace bliss

My simple maid has nectar arms
Each embrace brings life-thrilling charms.


GU Pope

Rejoicing in the Embrace

Ambrosia are the simple maiden's arms; when I attain
Their touch, my withered life puts forth its buds again!

The shoulders of this fair one are made of ambrosia, for they revive me with pleasure every time I embrace them.


Mu. Varadarajan

பொருந்தும்போதெல்லாம்‌ உயிர்‌ தளிர்க்கும்படியாகத்‌ தீண்டுதலால்‌ இவளுக்குத்‌ தோள்கள்‌ அமிழ்தத்தால்‌ செய்யப்பட்டிருக்க வேண்டும்‌.


Parimelalagar

இதுவும் அது. உயிர் உறுதோறு தளிர்ப்பத் தீண்டலால் - தன்னைப் பெறாது வாடிய என்னுயிர் பெற்றுறுந்தோறும் தளிர்க்கும் வகை தீண்டுதலான்; பேதைக்குத் தோள் அமிழ்தின் இயன்றன - இப்பேதைக்குத் தோள்கள் தீண்டப்படுவதோர் அமிழ்தினால் செய்யப்பட்டன.
விளக்கம்:
(ஏதுவாகலான் தீண்டல் அமிழ்திற்கு எய்திற்று - வாடிய உயிரைத் தளிர்ப்பித்தல் பற்றி, 'அவை அமிழ்தின் இயன்றன' என்றான். தளிர்த்தல் - இன்பத்தால் தழைத்தல்.)


Manakkudavar

(இதன் பொருள்) சாருந்தோறும் என்னுயிர் தழைப்பச் சார்தலால், பேதைக்குத் தோள்கள் அமுதினால் செய்யப்பட்டனவாகவேண்டும்,
(என்றவாறு). சாராத காலத்து இறந்துபடுவதான உயிரைத் தழைக்கப் பண்ணுதலான், அமுதம் போன்றதென்றவாறு. இது கூடிய தலைமகன் மகிழ்ந்து கூறியது.