குறள் 1109

புணர்ச்சிமகிழ்தல்

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்

oodal unarthal punarthal ivaikaamam
kootiyaar paetrra payan


Shuddhananda Bharati

Embrace bliss

Sulking, feeling and clasping fast
These three are sweets of lover's tryst.


GU Pope

Rejoicing in the Embrace

The jealous variance, the healing of the strife, reunion gained:
These are the fruits from wedded love obtained.

Love quarrel, reconciliation and intercourse - these are the advantages reaped by those who marry for lust.


Mu. Varadarajan

ஊடுதல்‌, ஊடலை உணர்ந்து விடுதல்‌, அதன்பின்‌ கூடுதல்‌ ஆகிய இவை காதல்‌ வாழ்வு நிறைவேறப்பெற்றவர்‌ பெற்ற பயன்களாகும்‌.


Parimelalagar

'கரத்தல் வேண்டாமையின், இடையறவு இல்லாத கூட்டமே இன்பப் பயனுடைத்து' என வரைவு கடாவியாட்குச் சொல்லியது. ஊடல் உணர்தல் புணர்தல் இவை - புணர்ச்சி இனிதாதற் பொருட்டு வேண்டுவதாய ஊடலும், அதனை அளவறிந்து நீங்குதலும், அதன்பின் நிகழ்வதாய அப்புணர்ச்சிதானும் என இவை அன்றே; காமம் கூடியார் பெற்ற பயன் - வரைந்து கொண்டு காமத்தை இடைவிடாது எய்தியவர் பெற்ற பயன்கள்?
விளக்கம்:
('ஆடவர்க்குப் பிரிவு என்பது ஒன்று உளதாதல் மேலும், அதுதான் பரத்தையர் மாட்டாதலும். அதனையறிந்து மகளிர் ஊடி நிற்றலும், அவ்வூடலைத் தவறு செய்தவர் தாமே தம் தவறின்மை கூறி நீக்கலும், பின்னும் அவ்விருவரும் ஒத்த அன்பினராய்க் கூடலுமன்றே முன்வரைந்தெய்தினார் பெற்ற பயன். அப்பயன் இருதலைப் புள்ளிள் ஓருயிராய் உழுவலன்புடைய எமக்கு வேண்டா,' என, அவ்வரைந் தெய்தலை இகழ்ந்து கூறியவாறு.)


Manakkudavar

(இதன் பொருள்) ஊடுதலும், ஊடல் தீர்தலும், பின்னைப் புணர்தலுமென்னு மிவை அன்பினாற் கூடினார் பெற்ற பயன்,
(என்றவாறு). காமம் - அன்பு. புணர்தலெனினும் பேணுதலெனினும் ஒக்கும். ஊடற் குறிப்புத் தோன்ற நின்ற தலைமகளை ஊடல் தீர்த்துப் புணர்ந்த தலைமகன் அத னால் வந்த மகிழ்ச்சி கூறியது.