குறள் 1102

புணர்ச்சிமகிழ்தல்

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து

pinikku marundhthu piraman aniyilai
thannoikkuth thaanae marundhthu


Shuddhananda Bharati

Embrace bliss

The cure for ailment is somewhere
For fair maid's ill she is the cure.


GU Pope

Rejoicing in the Embrace

Disease and medicine antagonists we surely see;
This maid, to pain she gives, herself is remedy.

The remedy for a disease is always something different (from it); but for the disease caused by this jewelled maid, she is herself the cure.


Mu. Varadarajan

நோய்களுக்கு மருந்து வேறு பொருள்களாக இருக்கின்றன; ஆனால்‌, அணிகலன்‌ அணிந்த இவளால்‌ வளர்ந்த நோய்க்கு இவளே மருந்தாக இருக்கின்றாள்‌.


Parimelalagar

இடந்தலைப் பாட்டின் கண் சொல்லியது. பிணிக்கு மருந்து பிற - வாதம் முதலிய பிணிகட்கு மருந்தாவன அவற்றிற்கு நிதானமாயினவன்றி மாறாய இயல்பினையுடையனவாம்; அணியிழை தன் நோய்க்கு மருந்து தானே - அவ்வாறன்றி இவ்வணியிழையினை உடையாள் தன்னினாய பிணிக்கு மருந்தும் தானேயாயினாள்.
விளக்கம்:
(இயற்கைப் புணர்ச்சியை நினைந்து முன் வருந்தினான் ஆகலின் 'தன்நோய்' என்றும், அவ்வருத்தந்தமியாளை இடத்து எதிர்ப்பட்டுத், தீர்ந்தானாகலின் 'தானே மருந்து ' என்றும் கூறினான். இப்பிணியும் எளியவாயவற்றால் தீரப் பெற்றிலம் என்பதுபட நின்றமையின், மன் ஒழியிசைக் கண் வந்தது.)


Manakkudavar

(இதன் பொருள்) நோயுற்றால் அதற்கு மருந்தாவது பிறிதொன்று; இவ்வணி யிழையால் வந்த நோய்க்குக் காரணமாகிய இவள் தானே மருந்தாம்,
(என்றவாறு). இது புணர்வதன் முன்னின்ற வேட்கை தணிந்தமை கூறிற்று.