குறள் 1078

கயமை

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்

sollap payanpaduvar saannor karumpupol
kollap payanpadum keel


Shuddhananda Bharati

Meanness

The good by soft words profits yield
The cane-like base when crushed and killed.


GU Pope

Baseness

The good to those will profit yield fair words who use;
The base, like sugar-cane, will profit those who bruise.

The great bestow (their alms) as soon as they are informed; (but) the mean, like the sugar-cane,only when they are tortured to death.


Mu. Varadarajan

அணுகிக்குறை சொல்லிய அளவிலேயே சான்றோர்‌ பயன்படுவர்‌; கரும்புபோல்‌ அழித்துப்‌ பிழிந்தால்தான்‌ கீழ்மக்கள்‌ பயன்படுவர்‌.


Parimelalagar

சொல்லப் பயன்படுவர் சான்றோர் - மெலியர் சென்று தம் குறையைச் சொல்லிய துணையானே இரங்கிப் பயன்படுவர் மேலாயினார்; கீழ் கரும்புபோல் கொல்லப் பயன்படும் - மறைக் கீழாயினார் கரும்பு போல வலியார் நைய நெருக்கிய வழிப் பயன்படுவர்.
விளக்கம்:
(பயன்படுதல்: உள்ளது கொடுத்தல். கீழாயினாரது இழிவு தோன்ற, மேலாயினாரையும் உடன் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அவர் கொடுக்குமாறு கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) பிறர் தங்குறையைச் சொல்ல அதற்கு இரங்கிப் பயன்படுவர் மேன் மக்கள் ; அவ்வாறன்றி, கரும்பு பயன்படுமாறு போலத் தம்மை நெருக்கினால் பயன்படுவர் கீழ்மக்கள்,
(என்றவாறு). இஃது ஒறுப்பார்க்குக் கொடுப்பரென்றது.