குறள் 1072

கயமை

நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர்

nanrari vaaritr kayavar thiruvutaiyar
naenjchaththu avalam ilar


Shuddhananda Bharati

Meanness

The base seem richer than the good
For no care enters their heart or head.


GU Pope

Baseness

Than those of grateful heart the base must luckier be,
Their minds from every anxious thought are free!

The low enjoy more felicity than those who know what is good; for the former are not troubled withanxiety (as to the good).


Mu. Varadarajan

நன்மை அறிந்தவரைவிடக்‌ கயவரே நல்ல பேறு உடையவர்‌; ஏன்‌ என்றால்‌, கயவர்‌ தம்‌ நெஞ்சில்‌ எதைப்‌ பற்றியும்‌ கவலை இல்லாதவர்‌.


Parimelalagar

நன்று அறிவாரின் கயவர் திரு உடையர் - தமக்குறுதியாவன அறிவாரின் அவையறியாத கீழ் மக்கள் நன்மையுடையார்; நெஞ்சத்து அவலம் இலர் - அவர் போல அவை காரணமாகத்தம் நெஞ்சத்தின்கண் கவலையிலராகலான்.
விளக்கம்:
(நன்று என்பது சாதியொருமை உறுதிகளாவன, இம்மை மறுமை வீடுகட்கு உரியவாய புகழ் அற ஞானங்கள். இவற்றை அறிவார் இதைச் செய்யாநின்றே 'மிகச் செயப்பெறுகின்றிலேம்' என்றும், செய்கின்ற இவை தமக்கு இடையூறு வருங்கொல் என்றும், இவற்றின் மறுதலையாய பழி பாவம் அறியாமை என்பனவற்றுள் யாது விளையுமோ என்றும், இவ்வாற்றான் கவலை எய்துவர்; கயவர் அப்புகழ் முதலிய ஒழித்துப் பழி முதலிய செய்யாநின்றும் யாதும் கவலை உடையரல்லராகலாம், 'திருவுடையர்' எனக் குறிப்பால் இகழ்ந்தவாறு. இதனான் பழி முதலியவற்றிற்கு அஞ்சார் என்பது கூறப்பட்டது.) _


Manakkudavar

(இதன் பொருள்) நன்மையறிவாரினும் கயவர் திருவுடையர் ; இம்மை மறுமைக்கு உறுதியாயின் செய்யப் பெறுகிலோ மென்னும் கவற்சி நெஞ்சின்கண் உறுதலில் ராதலான்,
(என்றவாறு) இது தாமறியா ரென்பது.