குறள் 1070

இரவச்சம்

கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்

karappavarkku yaangkolikkum kollo irappavar
sollaadap poom uyir


Shuddhananda Bharati

Dread of beggary

The word "No" kills the begger's life
Where can the niggard's life be safe?


GU Pope

The Dread of Mendicancy

E'en as he asks, the shamefaced asker dies;
Where shall his spirit hide who help denies?

Saying "No" to a beggar takes away his life. (but as that very word will kill the refuser) where thenwould the latter's life hide itself ?


Mu. Varadarajan

இரப்பவர்‌இல்லை' என்று சொல்கின்ற அளவிலேயே உயிர்‌ போகின்றதே; உள்ளதை இல்லை என்று ஒளிப்பவர்க்கு உயிர்‌ எங்கு ஒளிந்திருக்குமோ?


Parimelalagar

சொல்லாட இரப்பவர் உயிர் போம் - கரப்பார் இல்லை என்று சொல்லாடிய துணையானே இரப்பார்க்கு உயிர் போகாநின்றது; கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்கும் கொல் - இனிச் சொல்லாடுகின்ற அவர் தமக்கு உயிர் பின்னும் நிற்றலான், அப்பொழுது எப்புரையுள் புக்கொளிந்து நிற்கும்?
விளக்கம்:
(உயிர் போகலாவது, 'இனி யாம் என் செய்தும்?' என்று ஏங்கிச் செயலற்று நிற்றல். ''அந்நிலையே, மாயானோ மாற்றி விடின்'' (நாலடி. 308) என்றார் பிறரும். 'கேட்டாரைக் கொல்ல வற்றாய சொல், சொல்வாரைக்கோறல் சொல்லவேண்டாவாயினும் அது காண்கின்றிலம்; இஃகு என்னோ' என்பதாம். 'வறுமையுற்றுழி மறையாது இரக்கப்படுவாராய கேளிர் கட்கும் அதனைச் சொல்லாட உயிர் போம்; ஆனபின், மறைக்கப்படுவாராய பிறர்க்குச் சொல்லாடியக்கால் போகாது எங்கே ஒளிந்து நிற்கும்? இரண்டானும் போமேயன்றோ?' என இரவஞ்சினான் ஒருவன் கூற்றாக்கி உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் அவ்விரவின் குற்றமும் கரவின் குற்றமும் ஒருங்கு கூறப்பட்டன.)


Manakkudavar

(இதன் பொருள்) எமக்கு யாதும் இல்லை; சிறிது ஈயவேண்டு மென்று சொல்லு வார்க்கு, குறித்தவர்கள் இல்லையென்று சொன்ன அளவிலே அவர் உயிர் போய்ப் பிணம் போல நிற்பார்; பொருள் உடையராய் வைத்து அவர் சொன்ன இல்லை யென்னுஞ் சொல்லையே சொல்லி ஈயாதார்க்கு உயிர் எவ்விடத்து ஒளித்து நிற் கின்றதோ,
(என்றவாறு) இது பிணத்தை யொப்பரென்றது.