குறள் 1069

இரவச்சம்

இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும்

iravulla ullam urukum karavulla
ullathooum inrik kedum


Shuddhananda Bharati

Dread of beggary

The heart at thought of beggars melts;
It dies at repulsing insults.


GU Pope

The Dread of Mendicancy

The heart will melt away at thought of beggary,
With thought of stern repulse ‘twill perish utterly.

To think of (the evil of) begging is enough to melt one's heart; but to think of refusal is enough to break it.


Mu. Varadarajan

இரத்தலின்‌ கொடுமையை நினைந்தால்‌ உள்ளம்‌ கரைந்து உருகும்‌; உள்ளதை ஒளிக்கும்‌ கொடுமையை நினைந்தால்‌, உருகுமளவும்‌ இல்லாமல்‌ அழியும்‌.


Parimelalagar

இரவு உள்ள உள்ளம் உருகும் - உடையார்முன் இல்லார் சென்று இரந்து நிற்றலின் கொடுமையை நினைத்தால் எம் உள்ளங் கரைந்து உருகாநிற்கும்; கரவு உள்ளதூஉம் இன்றிக் கெடும் - இனி அந்நிலையைக் கண்டுவைத்தவர் இல்லை என்றலின் கொடுமையை நினைத்தால், அவ்வுருகுமளவுதானும் இன்றிப் பொன்றிவிடும்.
விளக்கம்:
(''இரவினை, உள்ளுங்கால் உள்ளம் உருகுமால் என்கொலோ, கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு.'' (நாலடி. 305) என்றார் பிறரும். இரவினும் கரவு கொடிது என்பதாம். இதற்குப் பிறரெல்லாம் 'இரக்கின்றவர் உள்ளம் உருகும்' என்று உரைத்தார்.)


Manakkudavar

(இதன் பொருள்) இரப்பென்று நினைக்க உள்ளம் கரையும்; இரக்கப்பட்டவர் காக்கு மதனை நினைக்க, கரைந்து நின்ற உள்ளமும் மாய்ந்து கெடும்,
(என்றவாறு). இஃது இரப்பார்க்கு ஆக்கமில்லை என்றது.