குறள் 107

செய்ந்நன்றி அறிதல்

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு

yelumai yelupirappum ulluvar thangkan
vilumandh thutaiththavar natpu


Shuddhananda Bharati

Gratitude

Through sevenfold births, in memory fares
The willing friend who wiped one's tears.


GU Pope

The Knowledge of Benefits Conferred - Gratitude

Through all seven worlds, in seven-fold birth, Remains in mem'ry of the wise.
Friendship of those who wiped on earth, The tears of sorrow from their eyes.

(The wise) will remember throughout their seven-fold births the love of those who have wiped away their affliction.


Mu. Varadarajan

தம்முடைய துன்பத்தைப்‌ போக்கி உதவியவரின்‌ நட்பைப்‌ பல்வேறு வகையான பிறவியிலும்‌ மறவாமல்‌ போற்றுவர்‌ பெரியோர்‌.


Parimelalagar

நம்கண் விழுமம் துடைத்தவர் நட்பு-தம்கண் எய்திய துன்பத்தை நீக்கினவருடைய நட்பினை; எழுமை எழுபிறப்பும் உள்ளுவர்-எழுமையினையுடைய தம் எழுவகைப் பிறப்பினும் நினைப்பர் நல்லோர்.
விளக்கம்:
(எழுமை' என்றது வினைப் பயன். தொடரும் ஏழு பிறப்பினை: அது வளையாபதியுள் கண்டது. எழுவகைப் பிறப்பு மேலே உரைத்தாம் (குறள். 62). விரைவு தோன்றத் 'துடைத்தவர்' என்றார். நினைத்தலாவது துன்பம் துடைத்தலான், அவர்மாட்டு உளதாகிய அன்பு பிறப்புதோறும் தொடர்ந்து அன்புடையராதல். இவை இரண்டு பாட்டானும் நன்றி செய்தாரது நட்பு விடலாகாது என்பது கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) தங்கண் உற்ற துன்பத்தை நீக்கினவரது நட்பை அப் பிறப் பிலே யன்றி எழுமையிலுந் தோற்றும் பிறப்பெல்லாம் நினைப்பர் சான்றோர் , ()