குறள் 1066

இரவச்சம்

ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்த தில்

aavitrku neeraenru irappinum naavitrku
iravin ilivandhtha thil


Shuddhananda Bharati

Dread of beggary

It may be water for the cow
Begging tongue is mean anyhow.


GU Pope

The Dread of Mendicancy

E'en if a draught of water for a cow you ask,
Nought's so distasteful to the tongue as beggar's task.

There is nothing more disgraceful to one's tongue than to use it in begging water even for a cow.


Mu. Varadarajan

சுவிற்கு நீர்வேண்டும்‌ என்று அறம்‌ நோக்கி இரந்து கேட்டாலும்‌ அந்த இரத்தலை விட நாவிற்கு இழிவானது மற்றொன்று இல்லை.


Parimelalagar

ஆவிற்கு நீர் என்று இரப்பினும் - தண்ணீர் பெறாது இறக்கும் நிலைமைத்தாயதோர் ஆவினைக் கண்டு, அறம் நோக்கி இதற்குத் தண்ணீர் தரல் வேண்டும் என்று இரந்து சொல்லுங்காலும்; இரவின் நாவிற்கு இளிவந்தது இல் - அவ்விரவு போல ஒருவன் நாவிற்கு இளிந்தது பிறிது இல்லை.
விளக்கம்:
(ஆகாத்தோம்பல் பேரறமாகலின், 'ஆவிற்கு' என்றும், பொருள் கொடுத்துக் கொள்ள வேண்டாத எண்மைத்தாகலின் 'நீர்' என்றும் இரக்கின்றானுக்கு இளிவு அச்சொல் அளவே ஆதலின் 'நாவிற்கு' என்றும், அதுதான் எல்லா இளிவினும் மேற்படுதலின், 'இளி வந்தது இல்' என்றும் கூறினார். இதனான் அறனும் முயன்று செய்வதல்லது இரந்து செய்யற்க என்பது கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) இப் பசுவிற்குத் தண்ணீர் தருமி னென்று பிறரை இரப்பினும், நாவினுக்கு இரத்தல் போல் இளிவரவு தருவது பிறிது இல்லை,
(என்றவாறு). இஃது அறத்திற்காக இரத்தலும் ஆகா தென்றது.