குறள் 1057

இரவு

இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து

ikalndhthaellaathu eevaaraik kaanin makilndhthullam
ullul uvappathu utaiththu


Shuddhananda Bharati

Asking

When givers without scorn impart
A thrill of delight fills the heart.


GU Pope

Mendicancy

If men are found who give and no harsh words of scorn employ,
The minds of askers, through and through, will thrill with joy.

Beggars rejoice exceedingly when they behold those who bestow (their alms) with kindness and courtesy.


Mu. Varadarajan

இகழ்ந்து எள்ளாமல்‌ பொருள்‌ கொடுப்பவரைக்‌ கண்டால்‌, இரப்பவரின்‌ உள்ளம்‌ மகிழ்ந்து உள்ளுக்குள்ளேயே உவகை அடையும்‌ தன்மையுடையதாகும்‌.


Parimelalagar

இகழ்ந்து எள்ளாது ஈவாரைக் காணின் - தம்மை அவமதித்து இழிவு சொல்லாது பொருள் கொடுப்பாரைக் கண்டால்; உள்ளம் மகிழ்ந்து உள்ளுள் உவப்பது உடைத்து - அவ்விரப்பாரது உள்ளம் மகிழ்ந்து உள்ளுள்ளே உவக்கும் தன்மையுடைத்து.
விளக்கம்:
(இகழ்ந்து எள்ளாது எனவே, நன்கு மதித்தலும் இனியவை கூறலும் பெறுதும். நிரப்பு இடும்பை கெடுதலளவேயன்றி, ஐம்புலன்களானும் பேரின்பம் எய்தினாராகக் கருதலான், ''உள்ளுள் உவப்பது உடைத்து'' என்றார். இவை ஐந்து பாட்டானும் அவ்விரத்தக்காரது இயல்பு கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) இரப்பாரைக் கண்டால் உதாசனித்தலும் இன்றி, அவர் சொன்ன மாற்றத்தை இகழ்ந்துரைத்தலும் செய்யாது, வேண்டப்பட்டதனைக் கொடுப்பா ரைக் காணின், இரந்து சென்றவர் மனம் மகிழ்ந்து நின்று உள்ளுள்ளே இன்புறுந் தன்மை யுடைத்து,
(என்றவாறு)