குறள் 1052

இரவு

இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்

inpam oruvatrku iraththal irandhthavai
thunpam uraaa varin


Shuddhananda Bharati

Asking

Even demand becomes a joy
When the things comes without annoy.


GU Pope

Mendicancy

Even to ask an alms may pleasure give,
If what you ask without annoyance you receive.

Even begging may be pleasant, if what is begged for is obtained without grief (to him that begs).


Mu. Varadarajan

இரந்து கேட்ட பொருள்கள்‌ துன்பமுறாமல்‌ கிடைக்குமானால்‌, அவ்வாறு இரத்தலும்‌ இன்பம்‌ என்று சொல்லத்‌ தக்கதாகும்‌.


Parimelalagar

ஒருவற்கு இரத்தல் இன்பம் - ஒருவற்கு இரத்தல்தானும் இன்பத்திற்கு ஏதுவாம்; இரந்தவை துன்பம் உறாஅ வரின் - இரந்த பொருள்கள் ஈவாரது உணர்வு உடைமையால் தான் துன்புறாமல் வருமாயின்.
விளக்கம்:
(இன்பம் - ஆகுபெயர். 'உறாமல்' என்பது கடைக்குறைந்து நின்றது. துன்பம் - சாதி யொருமைப் பெயர். அவையாவன, ஈவார்கண் காலமும் இடனும் அறிந்து சேறலும், அவர் குறிப்பறிதலும், அவரைத் தம் வயத்தராக்கலும், அவர் மனம் நெகிழ்வன நாடிச் சொல்லலும் முதலியவற்றான் வருவனவும், மறுத்துழி வருவனவும் ஆம். அவையுறாமல் வருதலாவது, அவர் முன்னுணர்ந்து ஈயக்கோடல். 'இரந்தவர் துன்பமுறாவரின்' என்று பாடம் ஓதி, 'இரக்கப்பட்டவர் பொருளின்மை முதலியவற்றால் துன்புறாது எதிர்வந்து ஈவராயின்' என்று உரைப்பாரும் உளர். இவை இரண்டு பாட்டானும் நல்குரவான் உயிர் நீங்கும் எல்லைக்கண் இளிவில்லா இரவு விலக்கப்படாது என்பது கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) இரத்தல் ஒருவர்க்கு இன்பமாம்; இரக்கப்பட்ட பொருள்கள் தான் வருத்தமுறாதவகை எய்துமாயின்,
(என்றவாறு). இது வேண்டிய பொருள் பெறின், துன்பமாகா தென்றது.