குறள் 1050

நல்குரவு

துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று

thuppura villaar thuvarath thuravaamai
uppitrkum kaatikkum kootrru


Shuddhananda Bharati

Poverty

Renounce their lives the poor must
Or salt and gruel go to waste.


GU Pope

Poverty

Unless the destitute will utterly themselves deny,
They cause their neighbour's salt and vinegar to die.

The destitute poor, who do not renounce their bodies, only consume their neighbour's salt and water.


Mu. Varadarajan

நுகரும்‌ பொருள்‌ இல்லாத வறியவர்‌ முற்றுந்‌ துறக்கக்‌ கூடியவராக இருந்தும்‌ துறக்காத காரணம்‌, உப்புக்கும்‌ கஞ்சிக்கும்‌ எமனாக இருப்பதே ஆகும்‌.


Parimelalagar

துப்புரவு இல்லார் துவரத் துறவாமை - நுகரப்படும் பொருள்களில்லாதார் தம்மாற் செயற்பாலது முற்றத் துறத்தலேயாகவும் அது செய்யாதொழிதல்: உப்பிற்கும் காடிக்கும் கூற்று - பிறர் இல்லினுளவாய உப்பிற்கும் காடிக்கும் கூற்றாம்.
விளக்கம்:
(மானம் அழியாமையின் செயற்பாலது அதுவேயாயிற்று. முற்றத் துறத்தல் - சுற்றத்தானே விட்டமையின் ஒருவாற்றால் துறந்தாராயினார். நின்ற தம் உடம்பினையும் துறத்தல். அது செய்யாது கொண்டிருத்தல் இரண்டனையும் மாளப்பண்ணுதலின், அதனை அவற்றிற்குக் கூற்று என்றார். இனி, 'முற்றத்துறத்தலாவது துப்புரவில்லாமையின் ஒருவாற்றால் துறந்தாராயினார், பின் அவற்றை மனத்தால் துறவாமை' என்று உரைப்பாரும் உளர். இதனான் அஃது உளதாயவழிச் செய்வது கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) நுகரும்பொருள் இல்லாதார் பொருளின்மேற் பற்றறத் துறவாது வருந்துதல், உப்பிற்குங் காடிக்குங் கேடாக வேண்டியம்,
(என்றவாறு). துறப்பாராயின், நன்றென்றவாறாயிற்று. நல்கூர்ந்தார்க்குத் துன்ப முறுத லன்றி, இன்ப நுகரும் நெறியுளவோ என்றார்க்கு , இது துறப்பாராயின், இன்ப முறலா மென்று கூறிற்று.