குறள் 1047

நல்குரவு

அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்

aranjsaaraa nalkuravu eenrathaa yaanum
piranpola nokkap padum


Shuddhananda Bharati

Poverty

Even the mother looks as stranger
The poor devoid of character.


GU Pope

Poverty

From indigence devoid of virtue's grace,
The mother e'en that bare, estranged, will turn her face.

He that is reduced to absolute poverty will be regarded as a stranger even by his own mother.


Mu. Varadarajan

அறத்தோடு பொருந்தாத வறுமை ஒருவனைச்‌ சேர்ந்தால்‌ பெற்ற தாயாலும்‌ அவன்‌ அயலனைப்‌ போல்‌ புறக்கணித்துப்‌ பார்க்கப்படுவான்‌.


Parimelalagar

அறம் சாரா நல்குரவு - அறத்தோடு இயைபில்லாத நல்குரவு உடையான்; ஈன்ற தாயானும் பிறன் போல நோக்கப்படும் - தன்னை ஈன்ற தாயானும் பிறனைக் கருதுமாறு போலக் கருதி நோக்கப்படும்.
விளக்கம்:
(அறத்தோடு கூடாமை - காரண காரியங்களுள் ஒன்றானும் இயையாமை. நல்குரவு - ஆகுபெயர். சிறப்பு உம்மை, அவளது இயற்கையன்புடைமை விளக்கி நின்றது. கொள்வதின்றாதலேயன்றிக் கொடுப்பது உண்டாதலும் உடைமையின், அது நோக்கிச் சுற்றத்தார் யாவரும் துறப்பர் என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) அறத்தோடு இயைபில்லாத நல்குரவுடையான் தன்னை யீன்ற தாயானும் பிறனைக் கருதுமாறு போலக் கருதி நோக்கப்படும்,
(என்றவாறு).