குறள் 1032

உழவு

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து

uluvaar ulakaththaarkku aaniakh thaatrraathu
yeluvaarai yellaam poruththu


Shuddhananda Bharati

Farming

Tillers are linch-pin of mankind
Bearing the rest who cannot tend.


GU Pope

Agriculture

The ploughers are the linch-pin of the world; they bear
Them up who other works perform, too weak its toils to share.

Agriculturists are (as it were) the linch-pin of the world for they support all other workers who cannot till the soil.


Mu. Varadarajan

உழவு செய்ய முடியாமல்‌ உயிர்‌ வாழ்கின்றவர்‌ எல்லாரையும்‌ தாங்குவதால்‌, உழவு செய்கின்றவர்‌ உலகத்தார்க்கு அச்சாணி போன்றவர்‌.


Parimelalagar

அஃது ஆற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து - அவ்உழுதலைச் செய்யமாட்டாது பிற தொழில்கள் மேல் செல்வார் யாவரையும் தாங்குதலால்; உழுவார்உலகத்தாருக்கு ஆணி - அது வல்லார் உலகத்தாராகிய தேர்க்கு அச்சாணியாவர்.
விளக்கம்:
('காடு கொன்று நாடாக்கிக் குளந்தொட்டு'' (பட்டினப் 283-4) என்றார்போல உழுவார் என்றது உழுவிப்பார் மேலுஞ் செல்லும். 'உலகத்தார்' என்றது ஈண்டு அவரையொழிந்தாரை, கலங்காமல் நிறுத்தற்கண் ஆணி போறலின்' 'ஆணி' என்றார், 'பொறுத்தலான்' என்பது திரிந்து நின்றது. ஏகதேச உருவம். 'அஃது ஆற்றார் தொழுவாரே எல்லாம் பொறுத்து' என்று பாடம் ஓதி, 'அது மாட்டாதார் புரப்பார் செய்யும் பரிபவமெல்லாம் பொறுத்து அவரைத் தொழுவாரேயாவர்' என்று உரைப்பாரும் உளர்.)


Manakkudavar

(இதன் பொருள்) உலகத்தாராகிய தேரினுக்கு அச்சாணிபோல்வார் உழுவாரே; அதனைச் செய்யாதாரே பிறர் பெருமிதத்தினால் செய்வனவெல்லாம் பொறுத்துத் தொழுது நிற்பார்,
(என்றவாறு) இஃது உழுவார் தம்மையும் அரசனையும் பெரியராக்குதலன்றி உலகத்தையும் தாங்குவரென்பது கூறிற்று.