குறள் 1021

குடிசெயல்வகை

கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல்

karumam seyaoruvan kaithoovaen yennum
paerumaiyin peedutaiyathu il


Shuddhananda Bharati

Promoting family welfare

No greatness is grander like
Saying "I shall work without slack".


GU Pope

The Way of Maintaining the Family

Who says 'T'll do my work, nor slack my hand’,
His greatness, clothed with dignity supreme, shall stand.

There is no higher greatness than that of one saying. I will not cease in my effort (to raise myfamily).


Mu. Varadarajan

குடிப்பெருமைக்கு உரிய கடமையைச்‌ செய்வதற்குச்‌ சோர்வடைய மாட்டேன்‌ என்று ஒருவன்‌ முயலும்‌ பெருமையைப்‌ போல மேம்பாடானது வேறொன்றும்‌ இல்லை.


Parimelalagar

கருமம் செயக் கைதூவேன் என்னும் பெருமையின்-தன் குடி செய்தற்பொருட்டுத் தொடங்கிய கருமம் முடியாமையின் எண்ணி கருமம் செய்தற்கு யான் கையொழியேன் என்னும் ஆள்வினைப்பெருமை போல; ஒருவன் பீடு உடையது இல் - ஒருவனுக்கு மேம்பாடுடைய பெருமை பிறிது இல்லை.
விளக்கம்:
('குடி செயற்கு என்பது அதிகாரத்தான் வந்தது. பலவகைத்தாய கருமச் செயலாற் செல்வமும் புகழும் எய்திக் குடி உயரும் ஆகலின், பீடுடையது இல்' என்றார். குடி செய்தற் கருமமே நடத்தலால் 'தன் கருமஞ் செய்ய' என்றும், 'பிறர் கருமஞ் செய்ய' என்றும், உரைப்பாரும் உளர். தன் கருமமும் அதுவேயாகலானும், பிறர் ஏவல் செய்தல் தலைமையன்மையானும், அவை உரையன்மை அறிக.)


Manakkudavar

குடிசெயல்வகையாவது குடியோம்புதல் வேண்டுமென்று கூறுதல். இது நாணமுடையார் செயலாதலின், அதன்பின் கூறப்பட்டது. (இதன் பொருள்) ஒருவன் கருமஞ்செய்தற்கு நான் ஒழியே னென்று சொல்லு கின்ற பெருமைபோலப் பெருமையுடையது பிறிது இல்லை,
(என்றவாறு)