குறள் 1013

நாணுடைமை

ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
நன்மை குறித்தது சால்பு

oonaik kuriththa uyiraellaam naanyennum
nanmai kuriththathu saalpu


Shuddhananda Bharati

Sensitiveness to shame

All lives have their lodge in flesh
Perfection has its home in blush.


GU Pope

Shame

All spirits homes of flesh as habitation claim,
And perfect virtue ever dwells with shame.

As the body is the abode of the spirit, so the excellence of modesty is the abode of perfection.


Mu. Varadarajan

எல்லா உயிர்களும்‌ ஊனாலாகிய உடம்பை இருப்பிடமாகக்‌ கொண்டவை: சால்பு என்பது, நாணம்‌ என்று சொல்லபடும்‌ நல்ல தன்மையை இருப்பிடமாகக்‌ கொண்டது.


Parimelalagar

உயிர் எல்லாம் ஊனைக் குறித்த - எல்லா உயிர்களும் உடம்பினைத் தமக்கு நிலைக்களனாகக் கொண்டு அதனை விடா; சால்பு நாண் என்னும் நன்மை குறித்து - அது போலச் சால்பு நாண் என்னும் நன்மைக் குணத்தைத் தனக்கு நிலைக்களனாகக் கொண்ட, அதனை விடாது.
விளக்கம்:
('உடம்பு' என்பது சாதியொருமை. நன்மை - ஆகுபெயர். உயிர் உடம்பொடு கூடியல்லது பயனெய்தாத வாறுபோலச் சால்பு நாணோடு கூடியல்லது பயன் எய்தாது என்பதாம். 'ஊணைக் குறித்த' என்று பாடம் ஓதுவாரும் உளர்.)


Manakkudavar

(இதன் பொருள்) பலவகை உயிரும் மேற்கூறிய எல்லாவற்றினும் உண்டியைக் கருதிற்று; அதுபோல, சால்பு நாணமாகிய நன்மையைக் கருதிற்று,
(என்றவாறு). இது சான்றோர்க்கு நற்குணங்கள் பலவும் வேண்டுமாயினும், இஃது இன்றியமையாதென்றது.