குறள் 656

வினைத்தூய்மை

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை

eenraachiasikaanpaan aayinunj seiyatrka saannor
saannor palikkum vinai


Shuddhananda Bharati

Purity of action

Though she who begot thee hungers
Shun acts denounced by ancient seers.


GU Pope

Purity in Action

Though her that bore thee hung'ring thou behold, no deed
Do thou, that men of perfect soul have crime decreed.

Though a minister may see his mother starve; let him do not act which the wise would (treat with contempt).


Mu. Varadarajan

பெற்ற தாயின்‌ பசியைக்‌ கண்டு வருந்த நேர்ந்தாலும்‌, சான்றோர்‌ பழிப்பதற்குக்‌ காரணமான இழிவுற்ற செயல்களை ஒருவன்‌ செய்யக்கூடாது.


Parimelalagar

ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் - தன்னைப் பயந்தாளது பசியை வறுமையால் கண்டு இரங்கும் தன்மையினான் எனினும்; சான்றோர் பழிக்கும் வினை செய்யற்க - அது சுட்டி அறிவுடையார் பழிக்கும் வினைகளை ஒருவன் செய்யாதொழிக.
விளக்கம்:
['இறந்த மூப்பினராய இருமுதுகுரவரும் கற்புடை மனைவியும் குழவியும் பசியான் வருந்தும் எல்லைக்கண் தீயன பலவுஞ் செய்தாயினும் புறந்தருக' என்னும் அறநூற்பொது விதி, பொருள்நூல் வழி ஒழுகுதலும், அரசர் தொழிற்கு உரியராதலும், நன்கு மதிக்கற்பாடும் உடைய அமைச்சர்க்கு எய்தாமைபற்றி, இவ்வாறு கூறினார். இவை ஐந்து பாட்டானும், 'பாவமும் பழியும் பயக்கும் வினை செய்யற்க' என்பது கூறப்பட்டது.]


Manakkudavar

(இதன் பொருள்) தன்னைப் பயந்தாள் பசிகண்டானாயினும், சான்றோரால் பழிக்கப் படும் வினையைச் செய்யாதொழிக, (எ - று. இது நல்லோர் பழிக்கும் வினையைத் தவிர்க என்றது.