குறள் 654

வினைத்தூய்மை

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்

idukkan patinum ilivandhtha seiyaar
nadukkatrra kaachi yavar


Shuddhananda Bharati

Purity of action

Though perils press the faultless wise
Shun deeds of mean, shameful device.


GU Pope

Purity in Action

Though troubles press, no shameful deed they do,
Whose eyes the ever-during vision view.

Those who have infallible judgement though threatened with peril will not do acts which have brought disgrace (on former ministers).


Mu. Varadarajan

அசைவற்ற தெளிந்த அறிவினையுடையயவர்‌, துன்பத்தில்‌ சிக்குண்டாலும்‌ (அத்‌ துன்பத்தைத்‌ தீர்ப்பதற்காகவும்‌) இழிவான செயல்களைச்‌ செய்யமாட்டார்‌.


Parimelalagar

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார் - தாம் இடுக்கணிலே படவரினும், அது தீர்தற்பொருட்டு முன் செய்தார்க்கு இளி வந்த வினைகளைச் செய்யார்; நடுக்கு அற்ற காட்சியவர் - துளக்கம் அற்ற தெளிவினை உடையார்.
விளக்கம்:
[சிறிது போழ்தில் கழிவதாய இடுக்கண் நோக்கி, எஞ்ஞான்றும் கழியாத இளிவு எய்தற்பாலது அன்று என்பதூஉம், அஃது எய்தினாலும் வருவது வரும் என்பதூஉம் தெளிவர் ஆகலான், 'செய்யார்' என்றார்.]


Manakkudavar

(இதன் பொருள்) துன்பம் வரினும் இழிவாகிய வினைகளைச் செய்யார், துளக்க மற்ற தெளிவுடையார்.
(என்றவாறு). இது பிறரால் இகழப்படுவன செய்யற்க வென்றது. இதனையும் கடிய வேண்டு மென்பது கூறப்பட்டது.