குறள் 627

இடுக்கணழியாமை

இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்

ilakkam udampidumpaik kenru kalakkaththaik
kaiyaaraak kollaathaam mael


Shuddhananda Bharati

Hope in mishap

The wise worry no more of woes
Knowing body's butt of sorrows.


GU Pope

Hopefulness in Trouble

"Man's frame is sorrow's target’, the noble mind reflects,
Nor meets with troubled mind the sorrows it expects.

The great will not regard trouble as trouble, knowing that the body is the butt of trouble.


Mu. Varadarajan

மேலோர்‌, உடம்பு துன்பத்திற்கு இலக்கமானது என்று உணர்ந்து, (துன்பம்‌ வந்தபோது) கலங்குவதை ஒழுக்க நெறியாகக்‌ கொள்ளமாட்டார்‌.


Parimelalagar

உடம்பு இடும்பைக்கு இலக்கம் என்று-நாற்கதியினும் உள்ள உடம்புகள் இடும்பை என்னும் வாளுக்கு இலக்கு என்று தெளிந்து; கலக்கத்தைக் கையாறக் கொள்ளாதாம் மேல்-தம் மேல் வந்த இடும்பையை இடும்பையாகக் கொள்ளார் அறிவுடையார்.
விளக்கம்:
(ஏகதேச உருவகம். 'உடம்பு' சாதிப் பெயர். 'கலக்கம்' என்னும் காரியப் பெயர் காரணத்தின்மேல் நின்றது. 'கையாறு' என்பது ஒரு சொல்; இதற்கு ஒழுக்க நெறி என்று உரைப்பாரும் உளர். இயல்பாகக் கொள்வர் என்பது குறிப்பெச்சம..)


Manakkudavar

(இதன் பொருள்) உடம்பு இடும்பைக்கு இலக்கம் என்று கருதி, தமக்கு உற்ற துன் பத்தைத் துன்பமாகக் கொள்ளார் மேலாயினார்,
(என்றவாறு). இது மேல் நன்மையாற் றவஞ் செய்யுங்கால் வருந் துன்பத்திற்கு அழியாதா ரைக் கூறிற்று.