குறள் 625

இடுக்கணழியாமை

அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்

adukki varinum alivilaan utrra
idukkan idukkat padum


Shuddhananda Bharati

Hope in mishap

Before the brave grief grieves and goes
Who dare a host of pressing woes.


GU Pope

Hopefulness in Trouble

When griefs press on, but fail to crush the patient heart,
Then griefs defeated, put to grief, depart.

The troubles of that man will be troubled (and disappear) who, however thickly they may come upon him, does not abandon (his purpose).


Mu. Varadarajan

விடாமல்‌ மேன்மேலும்‌ துன்பம்‌ வந்தபோதிலும்‌ கலங்காமலிருக்கும்‌ ஆற்றலுடையவன்‌ அடைந்த துன்பமே துன்பப்பட்டுப்‌ போகும்‌.


Parimelalagar

அடுக்கி வரினும்-இடைவிடாது மேன்மேல் வந்தனவாயினும்; அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கண்படும்-தன்னுள்ளக் கோட்பாடு விடாதான் உற்ற இடுக்கண் தாம் இடுக்கணிலே பட்டுப்போம்.
விளக்கம்:
(ஒன்றே பலகால் வருதலும், வேறுபட்டன விராய் வருதலும் அடங்க 'அடுக்கி வரினும்' என்றார். 'அழிவு' என்னும் காரணப்பெயர் காரியத்தின்மேல் நின்றது. இவை மூன்று பாட்டானும் தெய்வத்தான் ஆயதற்கு அழியாமை கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) மேன்மேலே துன்பம் வந்தனவாயினும், மன்னழிவில்லாதவன் உற்ற இடுக்கண், தான் இடுக்கண் படும்,
(என்றவாறு) இது மன்னழிவில்லாதவன் உற்ற துன்பம் மேன்மேல் வரினுங் கெடு மென்றது.