குறள் 586

ஒற்றாடல்

துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து
என்செயினும் சோர்விலது ஒற்று

thurandhthaar pativaththa raaki irandhthaaraaindhthu
yenseyinum chorvilathu otrru


Shuddhananda Bharati

Espionage

Guised as monks they gather secrets
They betray them not under threats.


GU Pope

Detectives

As monk or devotee, through every hindrance making way,
A spy, whate'er men do, must watchful mind display.

He is a spy who, assuming the appearance of an ascetic, goes into (whatever place he wishes),examines into (all, that is needful), and never discovers himself, whatever may be done to him.


Mu. Varadarajan

துறந்தவரின்‌ வடிவத்தை உடையவராய்‌, அரிய இடங்களிலெல்லாம்‌ சென்று ஆராய்ந்து, (ஐயுற்றவர்‌) என்ன செய்தாலும்‌ சோர்ந்துவிடாதவரே ஒற்றர்‌ ஆவார்‌.


Parimelalagar

துறந்தார் படிவத்தர் ஆகி இறந்து ஆராய்ந்து-முற்றும் துறந்தாராயும் விரதஒழுக்கினராயும் உள்யுகுதற்கு அரிய இடங்களெல்லாம் உள்புக்கு ஆராயவேண்டுவன ஆராய்ந்தறிந்து; என் செயினும் சோர்வு இலது ஒற்று -ஆண்டையார் ஐயுற்றுப் பிடித்து எல்லாத்துன்பமும் செய்து கேட்டாலும் தன்னை வெளிப்படுத்தாதவனே ஒற்றனாவான்.
விளக்கம்:
(விரத ஒழுக்கம்-தீர்த்த யாத்திரை முதலாயின. செயினும் என்பது அறவோர் என்று செய்வாரின்மை விளக்கி நின்றது. மேல் நால்கை உபாயத்தினும் சோர்வின்மை சொல்லி வைத்தும், ஈண்டும் தண்டத்தைப் பிரித்துக் கூறியது, அதனது பொறுத்தற்கு அருமைச் சிறப்பு நோக்கி. இதனுள் 'படிவம்' என்றதனை வேடமாக்கி, 'துறந்தார் வேடத்தாராகி' என்று உரைப்பாரும் உளர்.)


Manakkudavar

(இதன் பொருள்) தவஞ் செய்வார் வேடத்தராகி, நாட்டெல்லையைக் கடந்து போய், அங்குள்ள செய்தியை ஆராய்ந்து, அவ்விடத்து அகப்பட்டால் அவ்விடத்துள்ளார் துன்பமாயினும் இன்பமாயினும் செய்து கேட்டாலும், தன்னுள்ளக் கருத்தைச் சோரவிடாதவன் ஒற்றனாவன்,
(என்றவாறு).