குறள் 361

அவாவறுத்தல்

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து

avaayenpa yellaa uyirkkum yenjgnyaanrum
thavaaap pirappeenum viththu


Shuddhananda Bharati

Curbing of desire

Desire to all, always is seed
From which ceaseless births proceed.


GU Pope

The Extirpation of Desire

The wise declare, through all the days, to every living thing.
That ceaseless round of birth from seed of strong desire doth spring.

(The wise) say that the seed, which produces unceasing births, at all times, to all creatures, is desire.


Mu. Varadarajan

எல்லா உயிர்களுக்கும்‌ எக்காலத்திலும்‌ ஒழியாமல்‌ வருகின்ற பிறவித்‌ துன்பத்தை உண்டாக்கும்‌ வித்து அவா என்று கூறுவர்‌.


Parimelalagar

எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பு ஈனும்வித்து - எல்லா உயிர்கட்கும் எக்காலத்தும் கெடாது வருகின்ற பிறப்பினை விளைவிக்கும் வித்து; அவாஅ என்ப - அவா என்று சொல்லுவர் நூலோர்.
விளக்கம்:
(உடம்பு நீங்கிப்போம் காலத்து அடுத்த வினையும், அது காட்டும் கதி நிமித்தங்களும் அக்கதிக்கண் அவாவும் உயிரின்கண் முறையே வந்துதிப்ப, அறிவை மோகம் மறைப்ப, அவ்வுயிரை அவ்வவா அக்கதிக் கண் கொண்டுசெல்லும் ஆகலான், அதனைப் 'பிறப்பினும் வித்து' என்றும், கதிவயத் தான் உளதாய அவ்வுயிர் வேறுபாட்டினும் அவை தன்மை திரியும் உற்சர்ப்பிணி, அவசர்ப்பிணி என்னும் கால வேறுபாட்டினும் அது வித்தாதல் வேறுபடாமையின், 'எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்' என்றும், இஃது எல்லாச் சமயங்கட்கும் ஒத்தலான் 'என்ப' என்றும் கூறினார். இதனான், பிறப்பிற்கு அவா வித்து ஆதல் கூறப்பட்டது.)


Manakkudavar

அவாவறுத்தலாவது பொய்ப்பொருள்கள் மேற் செல்லும் ஆசையைத் தவிர்த் தல். முத்திக்குக் காரணமாக மெய்யுணர்தலே யமையுமாயினும், பின்னும் உடம் போடு நிற்றலின் தான் விட்ட பொருள்கள் மாட்டு ஆசை செல்லின், மீண்டும் பிறப்பிற்குக் காரணமாம்; ஆதலான், இதனைத் தவிர வேண்டுமென்று எல்லாவற் றினும் பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) எல்லாவுயிர்க்கும் எல்லா நாளுங் கேடில்லாத பிறப்பைக் கொடுக் கும் விதையாவது ஆசையென்று சொல்லுவர்,
(என்றவாறு) இஃது ஆசை துன்பம் தருதலேயன்றிப் பிறப்பையும் தருமென்றது.