குறள் 328

கொல்லாமை

நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை

nanraakum aakkam paerithaeninum saannorkkuk
konraakum aakkang katai


Shuddhananda Bharati

Non

The gain of slaughter is a vice
Though deemed good in sacrifice.


GU Pope

Not killing

Though great the gain of good should seem, the wise
Will any gain by staughter won despise.

The advantage which might flow from destroying life in sacrifice, is dishonourable to the wise (who renounced the world), even although it should be said to be productive of great good.


Mu. Varadarajan

கொலையால்‌ நன்மையாக விளையும்‌ ஆக்கம்‌ பெரிதாக இருந்தாலும்‌, சான்றோர்க்குக்‌ கொலையால்‌ வரும்‌ ஆக்கம்‌ மிக இழிவானதாகும்‌.


Parimelalagar

நன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும் - தேவர்பொருட்டு வேள்விக்கண் கொன்றால் இன்பம் மிகும் செல்வம்பெரிதாம் என்று இல்வாழ்வார்க்குக் கூறப்பட்டதாயினும்; சான்றோர்க்கு கொன்று ஆகும் ஆக்கம் கடை - துறவான் அமைந்தார்க்கு ஓர் உயிரைக் கொல்ல வரும் செல்வம் கடை,
விளக்கம்:
(இன்பம் மிகும் செல்வமாவது, தாமும்தேவராய்த் துறக்கத்துச் சென்று எய்தும் செல்வம். அது சிறிதாகலானும், பின்னும்பிறத்தற்கு ஏதுவாகலானும், வீடாகிய ஈறு இல் இன்பம் எய்துவார்க்குக் 'கடை' எனப்பட்டது.துறக்கம் எய்துவார்க்கு ஆம் ஆயினும், வீடு எய்துவார்க்கு ஆகாது என்றமையின், விதிவிலக்குகள் தம்முள் மலையாமை விளக்கிய வாறாயிற்று. இஃது இல்லறம் அன்மைக்குக் காரணம். இவை இரண்டு பாட்டானும் கொலையது குற்றம் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) நன்மையாகும் ஆ நகம் பெரிதேயாயினும், ஒருயிரைக் கொன்று ஆகின்ற ஆக்கம் உயர்ந்தோர்க்கு ஆகாது,
(என்றவாறு). இது பெரியோர் வீடுபேற்றை விரும்பிக் கன்மத்தை விடுத்தலால், வேள்வி யின் வரும் கொலையும் ஆகாதென்றது.