குறள் 326

கொல்லாமை

கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று

kollaamai maetrkon dolukuvaan vaalnaalmael
sellaathu uyirunnung kootrru


Shuddhananda Bharati

Non

Life-eating-Death shall spare the breath
Of him who no life puts to death.


GU Pope

Not killing

Ev'n death that life devours, their happy days shall spare,
Who law, 'Thou shall not kill', uphold with reverent care.

Yama, the destroyer of life, will not attack the life of him, who acts under the determination of never destroying life.


Mu. Varadarajan

கொல்லாத அறத்தை மேற்கொண்டு நடக்கின்றவனுடைய வாழ்நாளின்மேல்‌, உயிரைக்‌ கொண்டு செல்லும்‌ கூற்றுவனும்‌ செல்லமாட்டான்‌.


Parimelalagar

கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல் கொல்லாமையை விரதமாக மேற்கொண்டு ஒழுகுவானது வாழ்நாளின்மேல்; உயிர் உண்ணும் கூற்றுச் செல்லாது - உயிர் உண்ணும் கூற்றுச் செல்லாது.
விளக்கம்:
("மிகப்பெரிய அறம் செய்தாரும் மிகப்பெரிய பாவம் செய்தாரும் முறையான் அன்றி இம்மைதன்னுள்ளே அவற்றின்பயன் அனுபவிப்பர்' என்னும் அறநூல் துணிபு பற்றி, இப் பேரறம்செய்தான் தானும் கொல்லப்படான்; படானாகவே, அடியிற்கட்டிய வாழ்நாள் இடையூறின்றி எய்தும் என்பார், 'வாழ்நாள்மேல் கூற்றுச் செல்லாது,' என்றார். செல்லாதாகவே, காலம் நீட்டிக்கும்; நீட்டித்தால் ஞானம் பிறந்து உயிர் வீடு பெறும் என்பது கருத்து. இதனான் அவற்கு வரும் நன்மை கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) கொல்லாமையை விரதமாகக் கொண்டு ஒழுகுமவன் வாழ்நாளின் மேல், உயிருண்ணுங் கூற்றுச் செல்லாது,
(என்றவாறு). பிறவாமை யுண்டாமாதலால் கூற்றுச் செல்லாது என்றார். இது கொல் லாமையின் பயன் கூறிற்று.