குறள் 275

கூடாவொழுக்கம்

பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
ஏதம் பலவுந் தரும்

patrratrraem yenpaar patitrrolukkam yetrraetrraenru
yaetham palavundh tharum


Shuddhananda Bharati

Imposture

Who false within but freedom feign
Shall moan "What have we done" with pain.


GU Pope

Inconsistent Conduct

'Our souls are free,' who say, yet practise evil secretly,
'What folly have we wrought!' by many shames o'er-whelmed, shall cry.

The false conduct of those who say they have renounced all desire will one day bring them sorrows that will make them cry out, "Oh! what have we done, what have we done."


Mu. Varadarajan

'பற்றுக்களைத்‌ துறந்தோம்‌' என்று சொல்கின்றவரின்‌ பொய்யொழுக்கம்‌, என்ன செய்தோம்‌ என்ன செய்தோம்‌' என்று வருந்தும்படியான துன்பம்‌ பலவும்‌ தரும்‌.


Parimelalagar

பற்று அற்றேம் என்பார் படிற்று ஒழுக்கம் - தம்மைப் பிறர் நன்கு மதித்தற்பொருட்டு 'யாம் பற்று அற்றேம்' என்று சொல்வாரது மறைந்த ஒழுக்கம்; எற்று எற்று ஏதம் பலவும் தரும் - அப்பொழுது இனிதுபோலத் தோன்றும் ஆயினும், பின் 'என் செய்தோம்! என் செய்தோம்! என்று தாமே இரங்கும்வகை, அவர்க்குப் பல துன்பங்களையும் கொடுக்கும்.
விளக்கம்:
(சொல் அளவல்லது பற்று அறாமையின், 'பற்று அற்றேம் என்பார்' என்றும், சிறிதாய்க் கணத்துள்ளே அழிவதாய இன்பத்தின் பொருட்டுப் பெரிதாய் நெடுங்காலம் நிற்பதாய பாவத்தைச் செய்வார். அதன் விளைவின் கண் "அந்தோ வினையே என்றழுவர்" (சீவக. முத்தி, 27) ஆகலின், "எற்று எற்று" என்னும் கூறினார். இவை ஐந்து பாட்டானும் கூடா ஒழுக்கத்தின் இழுக்கம் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) பற்றினை யற்றேமென்பாரது குற்றத்தினை யுடைய ஒழுக்கம் எல்லாரும் எற்றெற்றென்று சொல்லும்படி பலகுற்றமும் உண்டாக்கும்,
(என்றவாறு). எற்றென்பது திசைச்சொல்; இது தீமை பயக்கு மென்றது.