குறள் 272

கூடாவொழுக்கம்

வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தான்அறி குற்றப் படின்

vaanuyar thotrram yevanseiyum thannaenjcham
thaanari kutrrap patin


Shuddhananda Bharati

Imposture

Of what avail are sky-high shows
When guild the conscience gnaws and knows.


GU Pope

Inconsistent Conduct

What gain, though virtue's semblance high as heaven his fame exalt,
If heart dies down through sense of self-detected fault?

What avails an appearance (of sanctity) high as heaven, if his mind suffers (the indulgence) of conscious sin.


Mu. Varadarajan

தன்‌ மனம்‌ தான்‌ அறிந்த குற்றத்தில்‌ தங்குமானால்‌ வானத்தைப்போல்‌ உயர்ந்துள்ள தவக்கோலம்‌, ஒருவனுக்கு என்ன பயன்‌ செய்யும்‌?


Parimelalagar

வான் உயர் தோற்றம் எவன் செய்யும் - ஒருவனுக்கு வான் போல உயர்ந்த தவ வேடம் என்ன பயனைச் செய்யும்; தான் அறி குற்றம் தன் நெஞ்சம் படின் - தான் குற்றம் என்று அறிந்த அதன் கண்ணே தன் நெஞ்சு தாழும் ஆயின்.
விளக்கம்:
('வான் உயர் தோற்றம்' என்பது ''வான் தோய்குடி'' (நாலடி. 142) என்றார்போல இலக்கணை வழக்கு. அறியாது செய்த குற்றமல்லது அறிந்து வைத்துச் செய்த குற்றம் கழுவப்படாமையின், நெஞ்சு குற்றத்ததாயேவிடும்; விடவே, நின்ற வேடமாத்திரத்துக்குப் புறத்தாரை வெருட்டுதலே அல்லது வேறு பயன் இல்லை என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) வானளவும் உயர்ந்த பெருமையுண்டாயினும், அஃதியாதினைச் செய்யவற்று; தன் னெஞ் சறியக் குற்ற முண்டாயின்,
(என்றவாறு). தான் - அசை. இஃது இக்கூடா ஒழுக்கத்தானைப் பிறரறிந்து இகழாரா யினும், அவன் செய்கின்ற தவத்தினாற் பயனுண்டாகாது என்றது.