குறள் 221

ஈகை

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து

variyaarkkonru eevathae eekaimatr raellaam
kuriyaethirppai neera thutaiththu


Shuddhananda Bharati

Charity

To give the poor is charity
The rest is loan and vanity.


GU Pope

Giving

Call that a gift to needy men thou dost dispense,
All else is void of good, seeking for recompense.

To give to the destitute is true charity. All other gifts have the nature of (what is done for) a measured return.


Mu. Varadarajan

வறியவர்க்கு ஒரு பொருளைக்‌ கொடுப்பதே ஈகை எனப்படுவது. மற்றவர்க்குக்‌ கொடுப்பதெல்லாம்‌ பயனை எதிர்பார்த்துக்‌ கொடுக்கும்‌ தன்மை உடையது.


Parimelalagar

வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை-ஒரு பொருளும் இல்லாதார்க்கு அவர் வேண்டியது ஒன்றைக் கொடுப்பதே பிறர்க்குக் கொடுத்தலாவது; மற்று எல்லாம் குறியெதிர்ப்பை நீரது உடைத்து-அஃதொழிந்த எல்லாக் கொடையும் குறியெதிர்ப்பைக் கொடுக்கும் நீர்மையை உடைத்து.
விளக்கம்:
(ஒழிந்த கொடைகளாவன: வறியவர் அல்லாதார்க்கு ஒரு பயன் நோக்கிக் கொடுப்பன. குறியெதிர்ப்பாவது அளவு குறித்து வாங்கி அவ்வாங்கியவாறே எதிர்கொடுப்பது. 'நீரது' என்புழி, 'அது' என்பது பகுதிப்பொருள் விகுதி. பின்னும் தன்பால் வருதலின், 'குறியெதிர்ப்பை நீரது உடைத்து' என்றார். இதனால் ஈகையது இலக்கணம் கூறப்பட்டது.)


Manakkudavar

ஈகையாவது இல்லென இரந்து வந்தார் யாவர்க்கும் வரையாது கொடுத்தல் (இதன் பொருள்) ஈகையாவது இல்லாதார்க்கு யாதானும் ஒன்றைக் கொடுத்தல் ; இஃதொழிந்த கொடையெல்லாம் குறியெதிர்ப்பை கொடுத்த நீர்மையாதலை யுடைத்து,
(என்றவாறு) இது கொடுக்குங்கால் இல்லாதார்க்குக் கொடுக்க வேண்டு மென்றது.