குறள் 1061

இரவச்சம்

கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும்

karavaathu uvandhtheeyum kannannaar kannum
iravaamai koati urum


Shuddhananda Bharati

Dread of beggary

Not to beg is billions worth
E'en from eye-like friends who give with mirth.


GU Pope

The Dread of Mendicancy

Ten million-fold 'tis greater gain, asking no alms to live,
Even from those, like eyes in worth, who nought concealing gladly give.

Not to beg (at all) even from those excellent persons who cheerfully give without refusing, will do immense good.


Mu. Varadarajan

உள்ளதை ஒளிக்காமல்‌ உள்ளம்‌ மகிழ்ந்து கொடுக்கும்‌ கண்போல்‌ சிறந்தவரிடத்திலும்‌ சென்று இரவாமலிருப்பதே கோடி மடங்கு நல்லது.


Parimelalagar

கரவாது உவந்து ஈயும் கண் அன்னார் கண்ணும் இரவாமை - தமக்கு உள்ளது கரவாது 'இவர் வரப்பெற்றோம்' என்று உள்மகிழ்ந்து கொடுக்கும் கண்போலச் சிறந்தார் மாட்டும், இரவாதே ஒருவன் வறுமை கூர்தல்; கோடி உறும் - இரந்து செல்வம் எய்தலின் கோடி மடங்கு நன்று.
விளக்கம்:
(நல்குரவு மறைக்கப்படாத நட்டார் மாட்டும் ஆகாது என்பதுபட நின்றமையின். உம்மை உயர்வுச் சிறப்பின்கண் வந்தது. அவ்விரவான் மானம் தீராது என்னும் துணையல்லது அதற்கு மிகுதி கூடாமையின், வல்லதோர் முயற்சியான் உயிரோம்பலே நல்லது என்பது கருத்து.)


Manakkudavar

இரவச்சமாவது இரத்தலைத் தவிர வேண்டு மென்று கூறுதல். மேல் நல்கூர்ந் தார் இவர்மாட்டே இரத்த வடையுமென்று பொதுப்படக் கூறினாராயினும், மேலாயினார்க்கு அது தகுதியன் றென்பது குறித்து இவ்வதிகாரம் கூறப்பட்டது. இது மேலதனோடியையும். (இதன் பொருள்) தமக் குள்ளது கரவாது இவர் வரப்பெற்றேமென்று உண் மகிழ்ந்து கொடுக்குங் கண்போலச் சிறந்தார் மாட்டும் இரவாதே ஒருவன் வறுமை கூர்தல் இரந்து செல்வமெய்தலிற் கோடி மடங்கு நன்று,
(என்றவாறு).