குறள் 1009

நன்றியில்செல்வம்

அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்

anporeeith thatrsetrru aranokkaathu eettiya
onporul kolvaar pirar


Shuddhananda Bharati

Futile wealth

Others usurp the shining gold
In loveless, stingy, vicious hold.


GU Pope

Wealth without Benefaction

who love abandon, self-afflict, and virtue's way forsake
To heap up glittering wealth, their hoards shall others take.

Strangers will inherit the riches that have been acquired without regard for friendship, comfort and charity.


Mu. Varadarajan

பிறரிடம்‌ செலுத்தும்‌ அன்பையும்‌ விட்டுத்‌ தன்னையும்‌ வருத்தி அறத்தையும்‌ போற்றாமல்‌ சேர்த்து வைத்த பெரும்‌ பொருளைப்‌ பெற்று நுகர்பவர்‌ மற்றவரே.


Parimelalagar

அன்பு ஒரீஇ - ஒருவன் கொடாமைப் பொருட்டுச் சுற்றத்தார் நட்டார்கண் அன்பு செய்தலையொழிந்து; தன் செற்று - வேண்டுவன நுகராது தன்னைச் செறுத்து; அறம் நோக்காது - வறியார்க்கு ஈதல் முதலிய அறத்தை நினைப்பதும் செய்யாது; ஈட்டிய ஒண்பொருள் கொள்வார் பிறர் - ஈட்டிய ஒள்ளிய பொருளைக் கொண்டுபோய்ப் பயன்பெறுவார் பிறர்.
விளக்கம்:
(பயனாய அறனும் இன்பமும் செய்து கொள்ளாதானுக்குப் பொருளால் உள்ளது ஈட்டல் துன்பமே என்பது தோன்ற 'ஈட்டிய' என்றும், அவன் வழியினுள்ளார்க்கும் உதவாது என்பது தோன்றப் 'பிறர்' என்றும் கூறினார்.)


Manakkudavar

(இதன் பொருள்) பொருள் தேடுங்கால் பிறர்மாட்டு அன்பு செய்தலையும் நீக்கி அது தேடினானாகிய தன்னைக் காத்தலுமின்றி, அறத்தையுஞ் செய்யாது, தொகுத்த ஒள்ளிய பொருளைக் கொள்வார் பிறர்,
(என்றவாறு).