குறள் 459

சிற்றினஞ்சேராமை

மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து

mananalaththin aakum marumaimatr rakhthum
inanalaththin yaemaap putaiththu


Shuddhananda Bharati

Avoiding mean company

Good mind decides the future bliss
Good company gains strength to this.


GU Pope

Avoiding mean Associations

Although to mental goodness joys of other life belong,
Yet good companionship is confirmation strong.

Future bliss is (the result) of goodness of mind; and even this acquires strength from the society ofthe good.


Mu. Varadarajan

மனத்தின்‌ நன்மையால்‌ மறுமை இன்பம்‌ உண்டாகும்‌; அதுவும்‌ இனத்தின்‌ நன்மையால்‌ மேலும்‌ சிறப்புடையதாகும்‌.


Parimelalagar

மனநலத்தின் மறுமை ஆகும் - ஒருவற்கு மனநன்மையானே மறுமை இன்பம் உண்டாம்; மற்ற அஃது இனநலத்தின் ஏமாப்பு உடைத்து - அதற்கு அச் சிறப்புத்தானும் இன நன்மையான் வலி பெறுதலை உடைத்து.
விளக்கம்:
(மனநலத்தின் ஆகும் மறுமை' என்றது, பயப்பது மனநன்மைதானே, பிறிதொன்று அன்று', என்னும் மதத்தை உடம்பட்டுக் கூறியவாறு. மற்று - வினைமாற்று. உம்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை. ஒரோவழித் தாமத குணத்தான மனநலம் திரியினும், நல்லினம் ஒப்ப நிறுத்தி மறுமை பயப்பிக்கும் என நிலைபெறச் செய்யுமாறு கூறப்பட்டது. இவை ஐந்து பாட்டானும் சிற்றினம் சேராமையது சிறப்பு நல்லினம் சேர்தலாகிய எதிர்மறை முகத்தால் கூறியவாறு அறிக.)


Manakkudavar

(இதன் பொருள்) மன நலத்தினாலே மறுமைப் பயன் நன்றாகும்; அம்மனத்தின் நன்மையும் இனநன்மையாலே தீத்தொழிலிற் செல்லாமற் காவலாதலையுடைத்து. இது மறுமைக்குத் துணையாமென்றது.