குறள் 442

பெரியாரைத் துணைக்கோடல்

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்

utrranoi neekki uraaamai mutrkaakkum
paetrriyaarp paenik kolal


Shuddhananda Bharati

Gaining great men's help

Cherish the help of men of skill
Who ward and safe-guard you from ill.


GU Pope

Seeking the Aid of Great Men

Cherish the all-accomplished men as friends,
Whose skill the present ill removes, from coming ill defends.

Let (a king) procure and kindly care for men who can overcome difficulties when they occur, andguard against them before they happen.


Mu. Varadarajan

வந்துள்ள துன்பத்தை நீக்கி, இனித்‌ துன்பம்‌ வராதபடி முன்னதாகவே காக்கவல்ல தன்மையுடையவரைப்‌ போற்றி நட்புக்‌ கொள்ள வேண்டும்‌.


Parimelalagar

உற்ற நோய் நீக்கி - தெய்வத்தானாக மக்களானாகத் தனக்கு வந்த துன்பங்களை நீக்குமாறு அறிந்து நீக்கி; உறாமை முற்காக்கும் பெற்றியார் . பின் அப்பெற்றியன வாராவண்ணம் முன் அறிந்து காக்கவல்ல தன்மையினையுடையாரை; பேணிக் கொளல் - அரசன் அவர் உவப்பன செய்து துணையாகக் கொள்க.
விளக்கம்:
(தெய்வத்தான் வரும் துன்பங்களாவன: மழையினது இன்மை மிகுதிகளானும், காற்று, தீ, பிணி என்ற இவற்றானும் வருவன. அவை கடவுளரையும் தக்கோரையும் நோக்கிச் செய்யும் சாந்திகளான் நீக்கப்படும். மக்களான் வரும் துன்பங்களாவன: பகைவர், கள்வர், கற்றறிந்தார், வினை செய்வார் என்றிவர்களான் வருவன. அவை சாமபேத தான தண்டங்கள் ஆகிய நால்வகை உபாயத்துள் ஏற்றதனால் நீக்கப்படும். முற்காத்தலாவது: தெய்வத்தான் வருவனவற்றை உற்பாதங்களால் அறித்து அச்சாந்திகளால் காத்தலும், மக்களான் வருவனவற்றை அவர் குணம், இங்கிதம், ஆகாரம், செயல் என்பனவற்றான் அறிந்து, அவ்வுபாயங்களுள் ஒன்றால் காத்தலும் ஆம்; ஆகவே, புரோகிதரையும் அமைச்சரையும் கூறியவாறாயிற்று. இங்கிதம் - குறிப்பால் நிகழும் உறுப்பின் தொழில். ஆகாரம் - குறிப்ரின்றி நிகழும் வேறுபாடு. உவப்பன - நன்கு மதித்தல் முதலியன. இவை இரண்டு பாட்டானும் பெரியாரது இலக்கணமும், அவரைத் துணையாகக் கோடல் வேண்டும் என்பதூஉம், கொள்ளுமாறும் கூறப்பட்டன.)


Manakkudavar

(இதன் பொருள்) அரசர் தமக்குற்ற நோயை விடுவித்துப் பின்பு துன்பமுறாமல் முன்னே காக்கவல்ல தன்மையுடையாரை விரும்பிக்கொள்க,
(என்றவாறு). பெற்றியாரென்று பொதுப்படக் கூறினமையால், இது மந்திரிகளைக் கூட் மாறு கூறிற்று.