குறள் 327

கொல்லாமை

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை

thannuyir neeppinum seiyatrka thaanpirithu
innuyir neekkum vinai


Shuddhananda Bharati

Non

Kill not life that others cherish
Even when your life must perish.


GU Pope

Not killing

Though thine own life for that spared life the price must pay,
Take not from aught that lives gift of sweet life away.

Let no one do that which would destroy the life of another, although he should by so doing, lose his own life.


Mu. Varadarajan

தன்‌ உயிர்‌ உடம்பிலிருந்து நீங்கிப்‌ போவதாக நேர்ந்தாலும்‌, அதைத்‌ தடுப்பதற்காகத்‌ தான்‌ வேறோர்‌ உயிரை நீக்கும்‌ செயலைச்‌ செய்யக்கூடாது.


Parimelalagar

தன் உயிர் நீப்பினும் - அது செய்யாவழித் தன்னுயிர் உடம்பின் நீங்கிப் போமாயினும்; தான் பிறிது இன் உயிர் நீக்கும் வினை செய்யற்க - தான் பிறிதோர் இன்னுயிரை அதன் உடம்பின் நீக்கும் தொழிலைச் செய்யற்க.
விளக்கம்:
('தன்னை அது கொல்லினும் தான் அதனைக் கொல்லற்க' என்றது பாவம் கொலையுண்டவழித் தேய்தலும், கொன்ற வழி வளர்தலும் நோக்கி. இனி, 'தன் உயிர் நீப்பினும்' என்றதற்குச் 'சாந்தியாகச் செய்யாதவழித் தன்னுயிர் போமாயினும்' என்று உரைப்பாரும் உளர். பிற செய்தலும் ஆகாமையின், அஃது உரையன்மை அறிக.)


Manakkudavar

(இதன் பொருள்) தன்னுயிர் நீங்கினும் செய்யாதொழிக; தான் பிறிதொன்றினு டைய இனிய வுயிரை விடுக்கும் தொழிலினை,
(என்றவாறு). உயிர்க்குக் கேடுவருங் காலத்து நோய்க்கு மருந்தாகக் கொல்லுதல் குற்ற மன்று என் பார்க்கு, இது கூறப்பட்டது.