குறள் 310

வெகுளாமை

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை

irandhthaar irandhthaar anaiyachiinaththaith thurandhthaar
thurandhthaar thurandhthaar thunai


Shuddhananda Bharati

Restraining anger

Dead are they who are anger-fed
Saints are they from whom wrath has fled.


GU Pope

The not being Angry

Men of surpassing wrath are like the men who've passed away;
Who wrath renounce, equals of all-renouncing sages they.

Those, who give way to excessive anger, are no better than dead men; but those, who are freed from it, are equal to those who are freed (from death).


Mu. Varadarajan

சினத்தில்‌ அளவுகடந்து சென்றவர்‌ இறந்தவரைப்‌ போன்றவர்‌; சினத்தை அடியோடு துறந்தவர்‌ துறந்தவர்க்கு ஒப்பாவார்‌.


Parimelalagar

இறந்தார் இறந்தார் அனையர் - சினத்தின் கண்ணே மிக்கார் உயிருடையராயினும் செத்தாரோடு ஒப்பர்; சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை - சினத்தைத் துறந்தார் சாதல் தன்மையராயினும், அதனை ஒழிந்தார் அளவினர்.
விளக்கம்:
(மிக்க சினத்தை உடையார்க்கு ஞானம் எய்துதற்கு உரிய உயிர் நின்றதாயினும், கலக்கத்தான் அஃது எய்தாமை ஒருதலையாகலின், அவரை 'இறந்தார் அனையர்' என்றும், சினத்தை விட்டார்க்குச் சாக்காடு எய்துதற்கு உரிய யாக்கை நின்றதாயினம், ஞானத்தான வீடு பெறுதல் ஒருதலையாகலின், அவரை 'வீடு பெற்றாரோடு ஒப்பர்' என்றும் கூறினார். இதனான் அவ்விருவர் பயனும் ஒருங்கு கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) சினத்தை மிகுத்தார் செத்தாரோடு ஒப்பர்; அதனை யொழிந் தார் எல்லாப் பொருளையுந் துறந்தாரோடு ஒப்பர்,
(என்றவாறு). இது வெகுளாதார் பெரியரென்றது.