குறள் 3

கடவுள் வாழ்த்து

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்

malarmisai yaekinaan maanati saerndhthaar
nilamisai needuvaal vaar


Shuddhananda Bharati

The praise of God

Long they live on earth who gain
The feet of God in florid brain.


GU Pope

The Praise of God

His feet, 'Who o'er the full-blown flower hath past,' who gain
In bliss long time shall dwell above this earthly plain.

They who are united to the glorious feet of Him who occupies swiftly the flower of the mind, shall flourish in the highest of worlds (heaven).


Mu. Varadarajan

அன்பரின்‌ அகமாகிய மலரில்‌ வீற்றிருக்கும்‌ கடவுளின்‌ சிறந்த திருவடிகளை இடைவிடாமல்‌ நினைக்கின்றவர்‌ இன்ப உலகில்‌ நிலைத்து வாழ்வார்‌.


Parimelalagar

மலர்மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார் - மலரின் கண்ணே சென்றவனது மாட்சிமைப்பட்ட அடிகளைச் சேர்ந்தார்; நிலமிசை நீடு வாழ்வார் - எல்லா உலகிற்கும் மேலாய் வீட்டு உலகின்கண் அழிவின்றி வாழ்வார்
விளக்கம்:
(அன்பான் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேரலின், 'ஏகினான்' என இறந்த காலத்தால் கூறினார்; என்னை? "வாராக் காலத்தும் நிகழும் காலத்தும், ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி, இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் விரைந்த பொருள் என்மனார் புலவர்" (தொல். சொல். வினை. 44) என்பது ஓத்தாகலின். இதனைப் 'பூமேல் நடந்தான்' என்பதோர் பெயர்பற்றிப் பிறிதோர் கடவுட்கு ஏற்றவாரும் உளர். சேர்தல்-இடைவிடாது நினைத்தல்.)


Manakkudavar

(இதன் பொருள்) மலரின் மேல் நடந்தானது மாட்சிமைப்பட்ட திருவடியைச் சேர்ந் தவான்றே நிலத்தின்மேல் நெடுங்காலம் வாழ்வார்,
(என்றவாறு) 'நிலம்' என்று பொதுப்படக் கூறியவதனான் இவ்வுலகின்கண்ணும் மேலுலகின்கண்ணு மென்று கொள்ளப்படும். தொழுதால் பயனென்னையென் றாற்கு, போகநுகர்தலும் வீடுபெற்லுமென்று கூறுவார் முற்படப் போக நுகர்வா ரென்று கூறினர்.