குறள் 1110

புணர்ச்சிமகிழ்தல்

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு

arithoru ariyaamai kandatrraal kaamam
serithorum saeyilai maatdu


Shuddhananda Bharati

Embrace bliss

As knowledge reveals past ignorance
So is the belle as love gets close.


GU Pope

Rejoicing in the Embrace

The more men learn, the more their lack of learning they detect;
'Tis so when I approach the maid with gleaming jewels decked.

As (one's) ignorance is discovered the more one learns, so does repeated intercourse with a well adorned female (only create a desire for more).


Mu. Varadarajan

செந்நிற அணிகலன்களை அணிந்த இவளிடம்‌ பொருந்துந்தோறும்‌ காதல்‌ உணர்தல்‌, நூற்பொருள்களை அறிய அறிய அறியாமை கண்டாற்‌ போன்றது.


Parimelalagar

புணர்ந்து உடன் போகின்றான் தன்னுள்ளே சொல்லியது. அறிதோறு அறியாமை கண்டற்று - நூல்களானும் நுண்ணுணர்வானும் பொருள்களை அறிய அறிய முன்னை அறியாமை கண்டாற்போலக் காணப்படாநின்றது; சேயிழைமாட்டுச் செறிதோறும் காமம் - சிவந்த இழையினையுடையாளை இடைவிடாது செறியச் செறிய இவள்மாட்டுக் காதல்.
விளக்கம்:
(களவொழுக்கத்திற் பல இடையீடுகளான் எய்தப் பெறாது அவாவுற்றான், இது பொழுது நிரந்தரமாக எய்தப் பெற்றமையின், 'செறிதோறும்' என்றான். அறிவிற்கு எல்லை இன்மையான், மேன்மேல் அறிய அறிய முன்னையறிவு அறியாமையாய் முடியுமாறு போலச் செறிவிற்கு எல்லையின்றி, மேன்மேற் செறியச் செறிய முன்னைச் செறிவு செறியாமையாய் முடியாநின்றது எனத் தன் ஆராமை கூறியவாறு. இப்புணர்ச்சி மகிழ்தல் தலைமகட்கும் உண்டேனும் அவள்மாட்டுக் குறிப்பான் நிகழ்வதல்லது கூற்றான் நிகழாமை அறிக.)


Manakkudavar

(இதன் பொருள்) யாதானும் ஒன்றை அறியுந்தோறும் அறியாமை தோன்றினாற் போலும்; இச் சேயிழைமாட்டுப் புணர்ச்சியும் புணருந்தோறும் அமையாமை . ( ) காமப் புணர்ச்சியாயிற்று. இஃது அமையாமையின் கூற்று.