குறள் 11

வான் சிறப்பு

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று

vaanninru ulakam valangki varuthalaal
thaanamiltham yenrunaratr paatrru


Shuddhananda Bharati

The blessing of Rain

The genial rain ambrosia call:
The world but lasts while rain shall fall.


GU Pope

The Excellence of Rain

The world its course maintains through life that rain unfailing gives;
Thus rain is known the true ambrosial food of all that lives.

By the continuance of rain the world is preserved in existence; it is therefore worthy to be called ambrosia.


Mu. Varadarajan

மழை பெய்ய உலகம்‌ வாழ்ந்துவருவதால்‌, மழையானது உலகத்து வாழும்‌ உயிர்களுக்கு அமிழ்தம்‌ என்று உணரத்‌ தக்கதாகும்‌.


Parimelalagar

வான் நின்று உலகம் வழங்கி வருதலால் - மழை இடையறாது நிற்ப உலகம் நிலைபெற்று வருதலான்; தான் அமிழ்தம் என்று உணரற்பாற்று-அம்மழைதான் உலகிற்கு அமிழ்தம் என்று உணரும் பான்மையை உடைத்து
விளக்கம்:
('நிற்ப' என்பது 'நின்று' எனத் திரிந்து நின்றது. 'உலகம்' என்றது ஈண்டு உயிர்களை. அவை நிலைபெற்று வருதலாவது பிறப்பு இடையறாமையின் எஞ்ஞான்றும் உடம்போடு காணப்பட்டு வருதல். அமிழ்தம் உண்டார் சாவாது நிலைபெறுதலின், உலகத்தை நிலைபெறுத்துகின்ற வானை' 'அமிழ்தம்' என்று உணர்க' என்றார்.)


Manakkudavar

வான் சிறப்பாவது மழையினது தலைமை கூறுதல். இது கடவுட் செய்கைத்தாதலான் அதன் பிற் கூறப்பட்டது. இஃதிண்டுக் கூறியதென்னையெனின், பின்னுரைக்கப் படுகின்ற இல்லறமுந் துறவறமும் மினிது நடப்பது மழையுண்டாயி னென்றற்குப் போலும்; அன்றியும், காலத்தின் பொருட்டுக் கூறினாரெனினும் அமையும். (இதன் பொருள்) மழைவளம் நிலை நிற்றலானே உலகநடை தப்பாது வருதலான், அம் மழைதான் உலகத்தார் அமுதமென்றுணரும் பகுதியது,
(என்றவாறு). இஃது அறம் பொரு ளின்பங்களை யுண்டாக்குதலானும், பலவகைப்பட்ட வுணவுகளை நிலை நிறுத்தலானும், இம் மழையினை மற்றுள்ள பூத மாத்திரமாக நினைக்கப் படாதென்ற நிலைமை கூறிற்று.