குறள் 1062

இரவச்சம்

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்

irandhthum uyirvaalthal vaentin parandhthu
keduka ulakiyatrri yaan


Shuddhananda Bharati

Dread of beggary

Let World-Maker loiter and rot
If "beg and live" be human fate.


GU Pope

The Dread of Mendicancy

If he that shaped the world desires that men should begging go,
Through life's long course, let him a wanderer be and perish so.

If the Creator of the world has decreed even begging as a means of livelihood, may he too goabegging and perish.


Mu. Varadarajan

உலகத்தைப்‌ படைத்தவன்‌ உலகில்‌ சிலர்‌ இரந்தும்‌ உயிர்வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால்‌, அவன்‌ இரப்பவரைப்‌ போல்‌ எங்கும்‌ அலைந்து கெடுவானாக!


Parimelalagar

உலகு இயற்றியான் இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் - இவ்வுலகத்தைப் படைத்தவன் இதன்கண் வாழ்வார்க்கு முயன்று உயிர் வாழ்தலையன்றி, இரந்தும் உயிர் வாழ்தலை வேண்டி விதித்தானாயின்; பரந்து கெடுக - அக்கொடியோன் தானும் அவரைப் போன்று எங்கும் அலமந்து கெடுவானாக.
விளக்கம்:
(மக்களுயிர்க்கெல்லாம் வாழ்நாளும், அதற்கு வேண்டுவதாய உண்டியும், அதற்கு ஏதுவாய செய்தொழிலும், பழவினை வயத்தால் கருவொடுங் கலந்தவன்றே அவன் கற்பிக்கும் அன்றே? அவற்றுள் சில உயிர்க்கு இரத்தலையும் ஒரு செய் தொழிலாகக் கற்பித்தானாயின், அத்தீவினையால் தானும் அத்துன்பமுறல் வேண்டும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் அவ்விரவின் கொடுமை கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) துப்புரவு இல்லாக்கால் இறந்துபடாதே பிறர்மாட்டு இரந்து கொண்டும் உயிர் வாழ்தல் வேண்டுமாயின், உலக நடையை இவ்வாறாகக் கற்பித்த முதல்வன் மிகக் கெடுவானாக வேண்டும்,
(என்றவாறு). இஃது இரக்கு மதனின், இறத்தல் அமையு மென்றது.