குறள் 1010

நன்றியில்செல்வம்

சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனையது உடைத்து

seerutaich selvachiiruthuni maari varangkoorndh
varangkoorndh thanaiyathu utaiththu


Shuddhananda Bharati

Futile wealth

The brief want of the rich benign
Is like rainclouds growing thin.


GU Pope

Wealth without Benefaction

'Tis as when rain cloud in the heaven grows day,
When generous wealthy man endures brief poverty.

The short-lived poverty of those who are noble and rich is like the clouds becoming poor (for a while).


Mu. Varadarajan

புகழ்‌ பொருந்திய செல்வர்‌ உற்ற சிறிய வறுமை உலகத்தைக்‌ காக்கவல்ல மேகம்‌ வறுமை மிகுந்தாற்‌ போன்ற தன்மை உடையது.


Parimelalagar

சீர் உடைச் செல்வர் சிறுதுனி - புகழுடைத்தாய செல்வத்தினையுடையவரது நிற்கும் காலம் சிறிதாய வறுமை மாரி வறங்கூர்ந்தனையது உடைத்து - உலகத்தையெல்லாம் நிலை நிறுத்தும் மேகம் வறுமை மிக்காற் போல்வதோர் இயல்பினையுடைத்து.
விளக்கம்:
(துனி - வெறுப்பு; அதனைச் செய்தலால், துனி எனப்பட்டது. யாவர்க்கும் பயன்பட்டார் அதனான் வறியராய வழியும், அவ்வறுமை கடிதின் நீங்குதலின், பின்பும் செல்வராய்ப் பயன்படுவர் என்பது உவமையால் பெறப்பட்டது. படவே, நன்றியில்லாத செல்வம் எஞ்ஞான்றும் பயன்படாது என்பதாயிற்று. இதற்கு, சீர் உடைச் செல்வர் இரவலரோடு வெறுக்கும் நிலையில் வெறுப்பு 'மாரி வறங்கூர்ந்தனைய தன்மையை உடைத்து' என அதிகாரத்தோடு பொருந்தாமை மேலும், ஓர் பொருள் தொடர்பு படாமல் உரைப்பாரும் உளர். இவை நான்கு பாட்டானும் அச்செல்வத்தது குற்றம் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) சீருடைய செல்வர் சிறுதுனியால் ஈயாதொழிதல், மாரி பெய் யாமை மிக்காற் போலும்,
(என்றவாறு). மேற்கூறிய நன்றியில் செல்வ முடையான்றி நற்செல்வமுடையாரும் பிறர்க்கு ஈயாராயின், மழை பெய்யாதாயின் உலகம் துன்பமுறுமாறு போல அவர் துன்பமுறுவரென்றவாறு.