The Knowledge of the Council Chamber 72

711

அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்

Men pure in heart, who know of words the varied force,
Should to their audience known adapt their well-arranged discourse.

சொற்களின்‌ தொகுதி அறிந்த தூய்மை உடையவர்‌, அவைக்களத்தின்‌ தன்மை அறிந்து ஏற்ற சொற்களை ஆராய்ந்து சொல்ல வேண்டும்‌.

Let the pure who know the arrangement of words speak with deliberation after ascertaining (the nature of) the court (then assembled).

பரிமேலழகர் உரை சொல்லின் தொகை அறிந்த தூய்மையவர் - சொல்லின் குழுவினை அறிந்த தூய்மையினையுடையார்; அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக - தாமென்று சொல்லுங்கால் அப்பொழுதை அவையினை அறிந்து ஆராய்ந்து சொல்லுக.
விளக்கம்:
(சொல்லின் குழுவெனவே, செஞ்சோல், இலக்கணச் சொல், குறிப்புச்சொல் என்னும் மூவகைச் சொல்லும் அடங்கின. தூய்மை: அவற்றுள் தமக்காகாதன ஒழித்து ஆவன கோடல். அவை என்றது ஈண்டு அதன் அளவை. அது மிகுதி, ஒப்பு, தாழ்வு என மூவகைத்து. அறிதல், தம்மொடு தூக்கி அறிதல். ஆராய்தல்: இவ்வவைக்கண் சொல்லும் காரியம் இது, சொல்லுமாறு இது, சொன்னால் அதன் முடிவு இது என்று, இவை உள்ளிட்டன ஆராய்தல்.)
மணக்குடவர் உரை அவையறிதலாவது இருந்த அவை யறிந்து அதற்குத் தக்க சொல்லுதல். அரசன் குறிப்பறிந்தாலும் அவையறிந்து சொல்லவேண்டு மாதலின், அதன் பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) இருந்த அவை யறிந்தாரை யறிந்து, அதற்குத்தக்க சொல்லின் திறத்தை ஆராய்ந்து, சொல்லுக ; சொல்லின் தொகுதியை யறிந்த தூய்மையை யுடையவர்,
(என்றவாறு) தொகையறிதல் - திறனறிதல். இது அவையறிந்து சொல்லல் வேண்டும் மென்றது.
712

இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர்

Good men to whom the arts of eloquence are known,
Should seek occasion meet, and say what well they’ve made their own.

சொற்களின்‌ நடையை ஆராய்ந்த நன்மை உடையவர்‌, அவையின்‌ செவ்வியை ஆராய்ந்து நன்றாக உணர்ந்து சொல்ல வேண்டும்‌.

Let the good who know the uses of words speak with a clear knowledge after ascertaining the time(suited to the court).

பரிமேலழகர் உரை சொல்லின்நடை தெரிந்த நன்மையவர் - சொற்களின் நடையினை ஆராய்ந்தறிந்த நன்மையினையுடையார்; இடைதெரிந்து நன்கு உணர்ந்து சொல்லுக - அவைக்கண் ஒன்று சொல்லுங்கால் அதன் செவ்வியை ஆராய்ந்து அறிந்து வழுப்படாமல் மிகவும் தௌ¢ந்து சொல்லுக.
விளக்கம்:
(சொற்களின் நடையாவது: அம்மூவகைச் சொல்லும் செம்பொருள்; இலக்கணைப் பொருள் குறிப்புப் பொருள் என்னும் பொருள்களைப் பயக்குமாறு. செவ்வி; கேட்டற்கண் விருப்புடைமை. வழு: சொல் வழுவும் பொருள் வழுவும். (இவை இரண்டு பாட்டானும் ஒன்று சொல்லுங்கால் அவையறிந்தே சொல்ல வேண்டும் என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) சொன்னால் அதற்கு வருங்குற்றத்தை ஆராய்ந்து, நன்மையா மவற்றை யறிந்து, சொல்லுக; சொல்லினது வழக்காராய்ந்த நன்மையுடையார். இஃது ஆராய்ந்து சொல்லுமாறு கூறிற்று.
713

அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல்

Unversed in councils, who essays to speak.
Knows not the way of suasive words,- and all is weak.

அவையின்‌ தன்மை அறியாமல்‌ சொல்லுதலை மேற்கொள்கின்றவர்‌, சொற்களின்‌ வகை அறியாதவரே; அவர்‌ சொல்லவல்லதும்‌ இல்லை.

Those who undertake to speak without knowing the (nature of the) court are ignorant of the quality of words as well as devoid of the power (of learning).

பரிமேலழகர் உரை அவை அறியார் சொல்லல் மேற்கொள்பவர் சொல்லின் வகை அறியார் - அவையினது அளவையறியாது ஒன்று சொல்லுதலைத் தம் மேற்கொள்வார் அச்சொல்லுதலின் கூறுபாடும் அறியார்; வல்லதூஉம் இல் - கற்றுவல்ல கலையும் அவர்க்கு இல்லை.
விளக்கம்:
(அம் மூவகைச் சொற்களால் வரும் சொல்லுதல் வகைமை கேட்பாரது உணர்வு வகைமைபற்றி வருதலால், 'சொல்லின் வகையறியார்' என்றும், அஃது அறியார் என்று எல்லாரானும் இகழப்படுதலின் 'வல்லதூஉம்இல்' என்றும் கூறினார். இதனான் அவையறியாக்கால் வரும் குற்றம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) அவையினது அளவை அறியாது ஒன்றைச் சொல்லுதலை மேற்கொள்பவர், சொல்லின் வகையும் அறியார் ; அவ்வாறன்றி வேறு வல்ல தூஉம் இலராவார்,
(என்றவாறு).
714

ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல்

Before the bright ones shine as doth the light!
Before the dull ones be as purest stucco white!

அறிவிற்‌ சிறந்தவரின்முன்‌ தாமும்‌ அறிவிற்‌ சிறந்தவராய்ப்‌ பேச வேண்டும்‌; அறிவில்லாதவர்‌ முன்‌ தாமும்‌ வெண்‌ சுண்ணம்போல்‌ அறிவில்லாதவராய்‌ இருக்க வேண்டும்‌.

Ministers should be lights in the assembly of the enlightned, but assume the pure whiteness ofmortar (ignorance) in that of fools.

பரிமேலழகர் உரை ஒளியார் முன் ஒள்ளியர் ஆதல் - அறிவால் ஔÿபுள்ளிÿளியாரவைக் கண் தாமும் ஒள்ளியாராக; வெளியார் முன் வான்சுதை வண்ணம் கொளல் - ஏனை வெள்ளைகள் அவைக்கண் தாமும் வாலிய கதையின் நிறத்தைக் கொள்க.
விளக்கம்:
(ஒள்ளியார் என்றது மிக்காரையும் ஒத்தாரையும். அது விகாரத்தால் ஒளியார் என்று நின்றது. ஒள்ளியராதல்: தம் நூலறிவுஞ் சொல்வன்மையும் தோன்ற விரித்தல். அவை அறியாத புல்லரை வெளியார்' என்றது. வயிரம் இல் மரத்தை வெளிறு' என்னும் வழக்குப்பற்றி. அவர் மதிக்கும் வகை அவரிலும் வெண்மையுடையராக என்பார், 'வான் சுதை வண்ணம் கொளல்' என்றார். அவையளவு அறிந்தார் செய்யும் திறம் இதனான் தொகுத்துக் கூறப்பட்டது. பின்னர் விரித்துக் கூறுப.) )
மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஒள்ளிய அறிவுடையார் முன்பு தாமும் ஒள்ளிய அறிவுடையா ராயிருத்தலும், வெள்ளிய அறிவுடையார் முன்பு வாலிய சுதை வண்ணம் போன்ற வெண்மையைக் கொண்டிருத்தலும், அவை யறிதலாவது,
(என்றவாறு).
715

நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு

Midst all good things the best is modest grace,
That speaks not first before the elders’ face.

அறிவு மிகுந்தவரிடையே முந்திச்‌ சென்று பேசாத அடக்கம்‌ ஒருவனுக்கு நன்மை என்று சொல்லப்பட்டவை எல்லாவற்றிலும்‌ நல்லது.

The modesty by which one does not rush forward and speak in (an assembly of) superiors is the bestamong all (one’s) good qualities.

பரிமேலழகர் உரை நன்று என்றவற்றுள்ளும் நன்றே - ஒருவற்கு இது நன்று என்று சிறப்பித்துச் சொல்லப்பட்ட குணங்கள் எல்லாவற்றுள்ளும் நன்றே; முதுவருள் முந்து கிளவாச் செறிவு - தம்மின் மிக்கார் அவைக்கண் அவரின் முற்பட்டு ஒன்றனைச் சொல்லாத அடக்கம்.
விளக்கம்:
(தம் குறைவும், அவர் மிகுதியும், முந்து கிளர்ந்தாற் படும் இழுக்கும், கிளவாக்கால் எய்தும் நன்மையும் அறிந்தே அடங்கினமையின், அவ்வடக்கத்தினை 'நன்று என்றவற்றுள்ளும் நன்று' என்றார். முன் கிளத்தலையே விலக்கினமையின், உடன் கிளத்தலும் பின் கிளத்தலும் ஆம் என்பது பெற்றாம். இதனான் மிக்கார் அவைக்கண் செய்யும் திறம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நன்றென்று சொல்லப்பட்ட எல்லாவற்றுள்ளும் மிக நன்று, தம்மின் முதிர்ந்தார்முன் அவரின் முற்பட்டு ஒன்றனைச் சொல்லாத அடக்கம். முதுவர் - தவத்தாலும் குலத்தாலும் கல்வியாலும் பிறயாதாலும் முதிர்ந்தார். இஃது இருந்த அவையின் கண் முந்துற்றுச் சொல்லல் ஆகா தென்றது.
716

ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு

As in the way one tottering falls, is slip before
The men whose minds are filled with varied lore.

விரிவான அறிவுத்துறைகளை அறிந்து உணர்கின்றவரின்‌ முன்னே குற்றப்படுதல்‌, ஒழுக்கநெறியிலிருந்து நிலை தளர்ந்து கெடுவதைப்‌ போன்றதாகும்‌.

(For a minister) to blunder in the presence of those who have acquired a vast store of learning andknow (the value thereof) is like a good man stumbling (and falling away) from the path (of virtue).

பரிமேலழகர் உரை ஆற்றின் நிலை தளர்ந்தற்று - வீடு எய்தற்பொருட்டு நன்னெறிக்கண் நின்றானொருவன் அந்நெறியினின்றும் நிலை தளர்ந்து வீழ்ந்தாலொக்கும்; வியன் புலம் ஏற்று உணர்வார் முன்னர் இழுக்கு - அகன்ற நூற்பொருள்களை உட்கொண்டு அவற்றின் மெய்ம்மையை உணரவல்லார் அவைக்கண் வல்லானொருவன் சொல் இழுக்குப்படுதல்.
விளக்கம்:
(நிலை தளர்ந்து வீழ்தல் 'உரன் என்னும் தோட்டியான் ஒரைந்தும் (குறள். 24) காத்தொழுகியான், பின் இழுக்கிக் கூடா ஒழுக்கத்தினால் பயன் இழத்தலே அன்றி இகழவும் படும் என்பதாம். இதனான் அதன்கண் இழுக்கியவழிப்படும் குற்றம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஒரு நெறியின்கண் நின்றார் அந்நிலைமை குலைந்தாற்போல் இகழப்படும், அகன்ற கல்வியைக் கேட்டறியவல்லார் முன்னர்த் தப்புதல், (எ-று). இது தப்புதல் வாராமற் சொல்லல் வேண்டுமென்றது.
717

கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து

The learning of the learned sage shines bright
To those whose faultless skill can value it aright.

குற்றமறச்‌ செயல்களை ஆராய்வதில்‌ வல்ல அறிஞரிடத்தில்‌, பல நூல்களையும்‌ கற்றறிந்தவரின்‌ கல்வியானது நன்றாக விளங்கித்‌ தோன்றும்‌.

The learning of those who have read and understood (much) will shine in the assembly of those who faultlessly examine (the nature of) words.

பரிமேலழகர் உரை கசடு அறச்சொல் தெரிதல் வல்லாரகத்து - வழுப்படாமல் சொற்களை ஆராய்தல் வல்லார் அவைக்கண் சொல்லின்; கற்று அறிந்தார் கல்வி விளங்கும் - பல நூல்களையும் கற்று அவற்றின் ஆய பயனை அறிந்தாரது கல்வி யாவர்க்கும் விளங்கித் தோன்றும்.
விளக்கம்:
('சொல்லின்' என்பது அவாய் நிலையான் வந்தது. ஆண்டே சொல்லுக என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நூல்களைக் கற்று, அதன் பயனும் அறிந்துள்ளாரது கல்வி விளங் காநிற்கும், குற்றமறச் சொற்களைச் சொல்லவல்லார் முன்னர்ச் சொல்லின், (எ-று). இது கல்வியின் விழுப்பம் கற்றார்க்கல்லது பிறர்க்கு அறிதலரிதென்றது.
718

உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று

To speak where understanding hearers you obtain,
Is sprinkling water on the fields of growing grain!

தாமே உணர்கின்ற தன்மை உடையவரின்‌ முன்‌ கற்றவர்‌ பேசுதல்‌, தானே வளரும்‌ பயிருள்ள பாத்தியில்‌ நீரைச்‌ சொரிந்தாற்‌ போன்றது.

Lecturing to those who have the ability to understand (for themselves) is like watering a bed of plants that are growing (of themselves).

பரிமேலழகர் உரை உணர்வது உடையார்முன் சொல்லல் - பிறர் உணர்த்தலின்றிப் பொருள்களைத் தாமே உணரவல்ல அறிவினையுடையவர் அவைக்கண் கற்றார் ஒன்றனைச் சொல்லுதல்; வளர்வதன் பாத்தியுள் நீர் சொரிந்தற்று - தானே வளர்வதொரு பயிர் நின்ற பாத்திக்கண் நீரினைச் சொரிந்தாற்போலும்.
விளக்கம்:
(தானேயும் வளர்தற்குரிய கல்வி மிக வளரும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும், ஒத்தார் அவைக்கண் எவ்வழியும் சொல்லுக என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) யாதாயினும் ஒன்றைச் சொல்லுங்கால், அதனைத் தெரிந்தறியும் அறிவுடையார் முன்பு சொல்லுவது, வளர்வதொன்று நின்ற பாத்தியின் கண்ணே நீர் சொரிந்தாற்போலும்,
(என்றவாறு)
719

புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்குசெலச் சொல்லு வார்

In councils of the good, who speak good things with penetrating power,
In councils of the mean, let them say nought, e’en in oblivious hour.

நல்ல அறிஞரின்‌ அவையில்‌ நல்ல பொருளை மனத்தில்‌ பதியுமாறு சொல்லவல்லவர்‌, அறிவில்லாதவரின்‌ கூட்டத்தில்‌ மறந்தும்‌ பேசக்கூடாது.

Those who are able to speak good things impressively in an assembly of the good should not even forgetfully speak them in that of the low

பரிமேலழகர் உரை நல்லவையுள் நன்கு செலச் சொல்லுவார் - நல்லார் இருந்த அவைக்கண் நல்ல பொருள்களை அவர் மனங்கொள்ளச் சொல்லுதற்குரியார்; புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க - அவையறியாத புல்லர் இருந்த அவைக்கண் அவற்றை மறந்தும் சொல்லாதொழிக.
விளக்கம்:
(சொல்லின், தம் அவையறியாமையை நோக்கி நல்லவையும், பொருளறியாமையால் புல்லவைதானும் இகழ்தலின், இரண்டு அவைக்கும் ஆகா என்பது கருதிப் 'பொச்சாந்தும் சொல்லற்க' என்றார்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) புல்லியவரிருந்த அவையின் கண் மறந்துஞ் சொல்லாதொழிக; நல்லவரிருந்த அவையின்கண் நல்லதனை இசையச் சொல்லவல்லார், (எ-று).
720

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல்

Ambrosia in the sewer spilt, is word
Spoken in presence of the alien herd.

தம்‌ இனத்தவர்‌ அல்லாதவரின்‌ கூட்டத்தின்முன்‌ ஒரு பொருள்‌ பற்றிப்‌ பேசுதல்‌, தூய்மையில்லாத முற்றத்தில்‌ சிந்திய அமிழ்தம்‌ போன்றது.

To utter (a good word) in the assembly of those who are of inferior rank is like dropping nectar on the ground.

பரிமேலழகர் உரை தம் கணத்தார் அல்லார் முன் கோட்டி கொளல் - நல்லார் தம்மினத்தரல்லாதார் அவைக்கண் ஒன்றனையும் சொல்லற்க; அங்கணத்துள் உக்க அமிழ்தற்று - சொல்லின், அது தூய்தல்லாத முற்றத்தின்கண் உக்க அமிழ்தனை ஒக்கும். ('கொள்' என்னும் முதனிலைத் தொழிற்பெயர் முன்னின்று பின் எதிர்மறை அல்விகுதியோடு கூடி 'மகன் எனல்'
விளக்கம்:
(குறள் 196) என்பது போல நின்றது. 'சொல்லின்,' 'அது' என்பன அவாய் நிலையான் வந்தன. பிறரெல்லாம் 'கொளல்' என்பதனைத் தொழிற் பெயராக்கி உரைத்தார்; அவர் அத்தொழில் அமிழ்து என்னும் பொருள் உவமையொடு இயையாமை நோக்கிற்றிலர். சாவா மருந்தாதல் அறிந்து நுகர்வார் கையினும் படாது அவ்வங்கணத்துக்கும் இயைபு இன்றிக் கெட்டவாறு தோன்ற, 'உக்க அமிழ்து' என்றார். அச்சொல் பயனில் சொல்லாம் என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் தாழ்ந்தார் அவைக்கண் ஒரு வழியும் சொல்லற்க என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) அங்கணத்தின்கண் உக்க அமுதம் போல் இகழப்படுவர்; தம் முடைய இனத்தாரல்லாதார் முன்னர் ஒன்றைச் சொல்லுவாராயின்,
(என்றவாறு). கல்வியுடையார் புல்லவையுள் சொன்னால் உளதாகுங் குற்றமென்னை யென்றார்க்கு , இது இகழப்படுவரென்று கூறிற்று.


transliteration

avaiyarindhthu aaraaindhthu solluka sollin
thokaiyarindhtha thooimai yavar

itaithaerindhthu nankunarndhthu solluka sollin
nataithaerindhtha nanmai yavar

avaiyariyaar sollalmaetr kolpavar sollin
vakaiyariyaar vallathooum il

oliyaarmun olliya raathal vaeliyaarmun
vaansuthai vannam kolal

nanraenra vatrrullum nanrae muthuvarul
mundhthu kilavaach serivu

aatrrin nilaithalarndh thatrrae viyanpulam
yaetrrunarvaar munnar ilukku

katrrarindhthaar kalvi vilangkum kachadarach
solthaerithal vallaar akaththu

unarva thutaiyaarmun sollal valarvathan
paaththiyul neersorindh thatrru

pullavaiyul pochsaandhthum sollatrka nallavaiyul
nankuselach sollu vaar

angkanaththul ukka amilthatrraal thangkanaththaar
allaarmun koatti kolal