Dread of Evil Deeds 21

201

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு

With sinful act men cease to feel the dread of ill within,
The excellent will dread the wanton pride of cherished sin.

தீயவை செய்தலாகிய செருக்கைத்‌ தீவினை உடைய பாவிகள்‌ அஞ்சார்‌; தீவினை இல்லாத மேலோர்‌ மட்டுமே அஞ்சுவர்‌.

Those who have experience of evil deeds will not fear, but the excellent will fear the pride of sin.

பரிமேலழகர் உரை தீவினை என்னும் செருக்கு-தீவினை என்று சொல்லப்படும் மயக்கத்தை; தீவினையார் அஞ்சார்-முன் செய்த தீவினையுடையார் அஞ்சார்; விழுமியார் அஞ்சுவர்-அஃது இலராகிய சீரியர் அஞ்சுவர்.
விளக்கம்:
('தீவினை என்னும் செருக்கு' எனக் காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது. மேல் தொட்டுச் செய்து கைவந்தமையான் 'அஞ்சார்' என்றும், செய்த அறியாமையான் 'அஞ்சுவர்' என்றும் கூறினார்.)
மணக்குடவர் உரை தீவினையச்சமாவது தீவினைகளைப் பிறர்க்குச் செய்யாமை. (இதன் பொருள்). என்றுந் தீத்தொழில் செய்வா ரஞ்சார்; சீரியரஞ்சுவர்; தீவினை யாகிய களிப்பை , (எ - று ). இஃது இதற்கு நல்லோ ரஞ்சுவ ரென்றது.
202

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்

Since evils new from evils ever grow,
Evil than fire works out more dreaded woe.

தீயசெயல்கள்‌ தீமையை விளைவிக்கும்‌ தன்மை உடையனவாக இருத்தலால்‌, அத்‌ தீய செயல்கள்‌ தீயைவிடக்‌ கொடியனவாகக்‌ கருதி அஞ்சப்படும்‌.

Because evil produces evil, therefore should evil be feared more than fire.

பரிமேலழகர் உரை தீயவை தீய பயத்தலான்-தனக்கு இன்பம் பயத்தலைக் கருதிச் செய்யும் தீவினைகள், பின் அஃது ஒழித்துத் துன்பமே பயத்தலான்; தீயவை தீயினும் அஞ்சப்படும் - அத்தன்மையவாகிய தீவினைகள் ஒருவனால் தீயினும் அஞ்சப்படும்.
விளக்கம்:
(பிறிதொரு காலத்தும், பிறிதொரு தேயத்தும், பிறிதோர் உடம்பினும் சென்று சுடுதல் தீக்கு இன்மையின், தீயினும் அஞ்சப்படுவதாயிற்று.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தீத்தொழிலானவை தமக்குத் தீமை பயத்தலானே, அத்தொழில் கள் தொடிற் சுடுமென்று தீக்கு அஞ்சுதலினும் மிக அஞ்சப்படும்,
(என்றவாறு).
203

அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்

Even to those that hate make no return of ill;
So shalt thou wisdom’s highest law, ‘tis said, fulfil.

தம்மை வருத்துவோர்க்கும்‌ தீய செயல்களைச்‌ செய்யாமலிருத்தலை, அறிவு எல்லாவற்றிலும்‌ தலையான அறிவு என்று கூறுவர்‌.

To do no evil to enemies will be called the chief of all virtues.

பரிமேலழகர் உரை அறிவினுள் எல்லாம் தலை என்ப-தமக்கு உறுதி நாடும் அறிவுரைகள் எல்லாவற்றுள்ளும் தலையாய அறிவு என்று சொல்லுவார் நல்லோர்; செறுவார்க்கும் தீய செய்யா விடல்-தம்மைச் செறுவார் மாட்டும் தீவினைகளைச் செய்யாது விடுதலை.
விளக்கம்:
(விடுதற்குக் காரணம் ஆகிய அறிவை 'விடுதல்' என்றும், செய்யத் தக்குழியுஞ் செய்யாது ஒழியவே தமக்குத் துன்பம் வாராது என உய்த்துணர்தலின், அதனை 'அறிவினுள் எல்லாம் தலை' என்றும் கூறினார். 'செய்யாது' என்பது கடைக்குறைந்து நின்றது. இவை மூன்று பாட்டானும் தீவினைக்கு அஞ்சவேண்டும் என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) எல்லா அறங்களையும் அறியும் அறிவு எல்லாவற்றுள்ளும் தலை யான அறிவென்று சொல்லுவர் நல்லோர் ; தமக்குத் தீமை செய்வார்க்குந் தாம் தீமை செய்யாதொழிதலை,
(என்றவாறு). இஃது எல்லாவற்றுள்ளுந் தலைமை யுடைத்தென்றது.
204

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு

Though good thy soul forget, plot not thy neighbour’s fall,
Thy plans shall ‘virtue’s Power’ by ruin to thyself forestall.

பிறனுக்குக்‌ கேட்டைத்‌ தரும்‌ தீய செயல்களை ஒருவன்‌ மறந்தும்‌ எண்ணக்கூடாது. எண்ணினால்‌, எண்ணியவனுக்குக்‌ கேடு விளையுமாறு அறம்‌ எண்ணும்‌.

Even though forgetfulness meditate not the ruin of another. Virtue will meditate the ruin of him who thus meditates.

பரிமேலழகர் உரை பிறன் கேடு மறந்தும் சூழற்க-ஒருவன் பிறனுக்குக் கேடு பயக்கும் வினையை மறந்தும் எண்ணாதொழிக; சூழின் சூழ்ந்தவன் கேடு அறம் சூழும்-எண்ணுவானாயின், தனக்குக் கேடு பயக்கும் வினையை அறக்கடவுள் எண்ணும்.
விளக்கம்:
('கேடு' என்பன ஆகுபெயர். சூழ்கின்ற பொழுதே தானும் உடன் சூழ்தலின், இவன் பிற்படினும் அறக்கடவுள் முற்படும் என்பது பெறப்பட்டது. அறக்கடவுள் எண்ணுதலாவது, அவன் கெடத் தான் நீங்க நினைத்தல். தீவினை எண்ணலும் ஆகாது என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) பிறனுக்குக் கேட்டை மறந்துஞ் சூழாதொழிக; சூழ்வனாயின், அவனாற் சூழப்பட்டவன் அதற்கு மாறாகக் கேடு சூழ்வதன்முன்னே சூழ்ந்தவ னுக்குக் கேட்டைத் தீமை செய்தார்க்குத் தீமை பயக்கும் அறந்தானே சூழும்,
(என்றவாறு). இது தீமை நினையினுங் கேடு தருமென்றது.
205

இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து

Make not thy poverty a plea for ill;
Thy evil deeds will make thee poorer still.

“யான்‌ வறியவன்‌’ என்று நினைத்துத்‌ தீய செயல்களைச்‌ செய்யக்கூடாது; செய்தால்‌ மீண்டும்‌ வறியவன்‌ ஆகி வருந்துவான்‌.

Commit not evil, saying, “I am poor”: if you do, you will become poorer still.

பரிமேலழகர் உரை இலன் என்று தீயவை செய்யற்க-'யான் வறியன்' என்று கருதி அது தீர்தற்பொருட்டுப் பிறர்க்குத் தீவினைகளை ஒருவன் செய்யாது ஒழிக; செய்யின் பெயர்த்தும் இலன் ஆகும்-செய்வானாயின் பெயர்த்தும் வறியன் ஆம்.
விளக்கம்:
(அத் தீவினையால் பிறவிதோறும் இலன் ஆம் என்பதாம். 'அன்' விகுதி முன் தனித்தன்மையினும், பின் படர்க்கை யொருமையினும் வந்தது. தனித்தன்மை 'உளனா என் உயிரை உண்டு' (கலித் குறிஞ்சி. 22) என்பதனானும் அறிக. மற்று-அசைநிலை. 'இலம்' என்று பாடம் ஓதுவாரும் உளர். 'பொருளான் வறியன் எனக் கருதித் தீயவை செய்யற்க; செய்யின், அப்பொருளானேயன்றி, நற்குண நற்செய்கைகளானும் வறியனாம்,' என்று உரைப்பாரும் உளர்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நல்கூர்ந்தேமென்று நினைத்துச் செல்வத்தைக் கருதித் தீவினை யைச் செய்யாதொழிக; செய்வனாயின், பின்பும் நல்குரவினனாவன்; அது செல் வம் பயவாது, (எ-று). இது வறுமை தீரத் தீமை செய்யினும் பின்பும் வறியனாகுமென்றது.
206

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்

What ranks as evil spare to do, if thou would’st shun
Affliction sore through ill to thee by others done.

துன்பம்‌ செய்யும்‌ தீவினைகள்‌ தன்னை வருத்துதலை விரும்பாதவன்‌, தீய செயல்களைத்‌ தான்‌ பிறர்க்குச்‌ செய்யாமலிருக்கவேண்டும்‌.

Let him not do evil to others who desires not that sorrows should pursue him.

பரிமேலழகர் உரை நோய்ப்பால தன்னை அடல் வேண்டாதான்-துன்பம் செய்யும் கூற்றவாகிய பாவங்கள் தன்னைப் பின் வந்து வருத்துதலை வேண்டாதவன்; தீப்பால தான் பிறர்கண் செய்யற்க - தீமைக் கூற்றவாகிய வினைகளைத் தான் பிறர்மாட்டுச் செய்யாது ஒழிக.
விளக்கம்:
(செய்யின், அப்பாவங்கள் அடுதல் ஒருதலை என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தன்னைத் துன்பப்பகுதியானவை நலிதல் வேண்டாதவன், தீமை யாயினவற்றைத் தான் பிறர்க்குச் செய்யாதொழிக,
(என்றவாறு). இது நோயுண்டாமென்றது.
207

எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்

From every enmity incurred there is to ‘scape, a way;
The wrath of evil deeds will dog men’s steps, and slay.

எவ்வளவு கொடிய பகை உடையவரும்‌ தப்பி வாழ முடியும்‌; ஆனால்‌ தீயவை செய்தால்‌ வரும்‌ தீவினையாகிய பகை நீங்காமல்‌ பின்சென்று வருத்தும்‌.

However great be the enmity men have incurred they may still live. The enmity of sin will incessantly pursue and kill.

பரிமேலழகர் உரை எனைப்பகை உற்றானாம் உய்வர்-எத்துணைப் பெரிய பகை உடையாரும் அதனை ஒருவாற்றால் தப்புவர்; வினைப்பகை வீயாது பின் சென்று அடும்-அவ்வாறன்றித் தீவினை ஆகிய பகை நீங்காது புக்குழிப் புக்குக் கொல்லும்
விளக்கம்:
("வீயாது உடம்பொடு நின்ற உயிரும் இல்லை" (புறநா.363) என்புழியும் வீயாமை நீங்காமைக்கண் வந்தது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) எல்லாப்பகையும் உற்றார்க்கும் உய்தியுண்டாம்; தீவினை யாகிய பகை நீங்காது என்றும் புக்குழிப் புகுந்து கொல்லும்,
(என்றவாறு). அஃதாமாறு பின் கூறப்படும்.
208

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று

Man’s shadow dogs his steps where’er he wends;
Destruction thus on sinful deeds attends.

தீய செயல்களைச்‌ செய்தவர்‌ கேட்டை அடைதல்‌, ஒருவனுடைய நிழல்‌ அவனை விடாமல்‌ வந்து அடியில்‌ தங்கியிருத்தலைப்‌ போன்றது.

Destruction will dwell at the heels of those who commit evil even as their shadow that leaves them not.

பரிமேலழகர் உரை தீயவை செய்தார் கெடுதல்-பிறர்க்குத் தீவினை செய்தார் தாம் கெடுதல் எத்தன்மைத்து எனின்; நிழல் தன்னை வீயாது அடி உறைந்தற்று-ஒருவன் நிழல் நொடிதாகப் போயும், அவன்றன்னை விடாது வந்து அடியின்கண் தங்கி தன்மைத்து.
விளக்கம்:
(இவ்வுவமையைத் தன் காலம் வருந்துணையும் புலனாகாது உயிரைப்பற்றி நின்று அது வந்துழி உருப்பதாய தீவினையைச் செய்தார், பின் அதனால் கெடுதற்கு உவமையாக்கி உரைப்பாரும் உளர். அஃது உரை அன்று என்பதற்கு 'அடி உறைந்த நிழல் தன்னை வீந்தற்று' என்னாது, 'வீயாது அடி உறைந்தற்று,' என்ற பாடமே கரியாயிற்று. மேல், 'வீயாது பின் சென்று அடும்' என்றார். ஈண்டு அதனை உவமையான் விளக்கினார்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தீயவானவற்றைப் பிறர்க்குச் செய்தார் கெடுதல், நிழல் தன்னை நீங்காதே உள்ளடியின்கீழ் ஒதுங்கினாற் போலும்,
(என்றவாறு). மேல் வினைப்பகை பின் சென்றடுமென்றார் அஃதடுமாறு காட்டினார்.
209

தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்

Beware, if to thyself thyself is dear,
Lest thou to aught that ranks as ill draw near!

ஒருவன்‌ தன்னைத்‌ தான்‌ விரும்பி வாழ்பவனாயின்‌, தீய செயலாகிய பகுதியை எவ்வளவு சிறியதாயினும்‌ பொருந்தாமல்‌ நீங்க வேண்டும்‌.

If a man love himself, let him not commit any sin however small.

பரிமேலழகர் உரை தன்னைத் தான் காதலன் ஆயின்-ஒருவன் தன்னைத்தான் காதல் செய்தல் உடையனாயின்; தீவினைப்பால் எனைத்து ஒன்றும் துன்னற்க-தீவினையாகிய பகுதி எத்துணையும் சிறிது ஒன்றாயினும் பிறர்மாட்டுச் செய்யாது ஒழிக.
விளக்கம்:
(நல்வினை தீவினை என வினைப்பகுதி இரண்டாகலின், 'தீவினைப் பால்' என்றார். பிறர்மாட்டுச் செய்து தீவினை தன் மாட்டுத் துன்பம் பயத்தல் விளக்கினார். ஆகலின், 'தன்னைத்தான் காதலன் ஆயின்' என்றார். இவை ஆறு பாட்டானும் பிறர்க்குத் தீவினை செய்யின் தாம் கெடுவர் என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தனக்குத் தான் நல்லவனாயின், யாதொன்றாயினும் தீவினைப் பகுதியாயினவற்றைப் பிறர்க்குச் செய்யாதொழிக,
(என்றவாறு). இது தீவினைக்கு அஞ்ச வேண்டுமென்றது.
210

அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்

The man, to devious way of sin that never turned aside,
From ruin rests secure, whatever ills betide.

ஒருவன்‌ தவறான நெறியில்‌ சென்று தீய செயல்‌ செய்யாதிருப்பானானால்‌ அவன்‌ கேடு இல்லாதவன்‌ என்று அறியலாம்‌.

Know ye that he is freed from destruction who commits no evil, going to neither side of the right path.

பரிமேலழகர் உரை மருங்கு ஓடித் தீவினை செய்யான் எனின்-ஒருவன் செந்நெறிக் கண் செல்லாது கொடுநெறிக்கண் சென்று பிறர் மாட்டுத் தீவினைகளைச் செய்யானாயின்; அருங்கேடன் என்பது அறிக-அவன் அரிதாகிய கோட்டையுடையவன் என்பது அறிக.
விளக்கம்:
(அருமை:இன்மை. அருங்கேடன் என்பதனை, "சென்று சேக்கல்லாப் புள்ள உள்ளில் என்றூழ் வியன்குளம்" (அகநா.42) என்பது போலக் கொள்க. 'ஓடி' என்னும் வினையெச்சம் 'செய்யான்' என்னும் எதிர்மறை வினையின் செய்தலோடு முடிந்தது. இதனால் தீவினை செய்யாதவன் கேடிலன் என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஒருமருங்கு ஓடிப் பிறர்க்குத் தீவினைகளைச் செய்யானாயின், தனக்குக் கேடுவருவ தில்லை யென்று தானே யறிக,
(என்றவாறு). இது கேடில்லை யென்றது.


transliteration

theevinaiyaar anjsaar vilumiyaar anjsuvar
theevinai yennum serukku

theeyavai theeya payaththalaal theeyavai
theeyinum anjchap padum

arivinul yellaandh thalaiyaenpa theeya
seruvaarkkum seiyaa vidal

marandhthum pirankaedu koolatrka koolin
aranjkoolum koolndhthavan kaedu

ilanyenru theeyavai seiyatrka seiyin
ilanaakum matrrum paeyarththu

theeppaala thaanpirarkan seiyatrka noippaala
thannai adalvaentaa thaan

yenaippakai yutrraarum uivar vinaippakai
veeyaathu pinsenru adum

theeyavai seithaar keduthal nilalthannai
veeyaathu atiuraindh thatrru

thannaiththaan kaathala naayin yenaiththonrum
thunnatrka theevinaip paal

arungkaedan yenpathu arika marungkoatith
theevinai seiyaan yenin