Poverty 105

1041

இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது

You ask what sharper pain than poverty is known;
Nothing pains more than poverty, save poverty alone.

வறுமையைப்‌ போல்‌ துன்பமானது எது என்று கேட்டால்‌, வறுமையைப்‌ போல்‌ துன்பமானது வறுமை ஒன்றே ஆகும்‌,

There is nothing that afflicts (one) like poverty.

பரிமேலழகர் உரை இன்மையின் இன்னாதது யாது எனின் - ஒருவனுக்கு வறுமை போல இன்னாதது யாது என்று வினவின்; இன்மையின் இன்னாதது இன்மையே - வறுமை போல இன்னாதது வறுமையே, பிறிதில்லை.
விளக்கம்:
(இன்னாதது - துன்பஞ் செய்வது. ஒப்பது இல்லை எனவே, மிக்கது இன்மை சொல்ல வேண்டாவாயிற்று.)
மணக்குடவர் உரை நல்குரவாவது பொருளில்லாதார்க்கு உளதாகுங் குற்றங் கூறுதல். இஃது உழவில்லாதார்க்கு உளதாவ தொன்றாதலின், அதன்பின் கூறப்பட்டது. (இதன் பொருள்) நல்குரவுபோல் இன்னாதது யாதெனின், நல்குரவுபோல இன்னா தது தானே, (தானே - நல்குரவே),
(என்றவாறு). இது தன்னை யொத்த இன்னாதது பிறிதில்லை யென்றது
1042

இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்

Malefactor matchless! poverty destroys
This world’s and the next world’s joys.

வறுமை என்று சொல்லப்படும்‌ பாவி ஒருவனை நெருங்கினால்‌, அவனுக்கு மறுமையின்பமும்‌ இம்மையின்பமும்‌ இல்லாமற்‌ போகும்‌ நிலைமை வரும்‌.

When cruel poverty comes on, it deprives one of both the present and future (bliss).

பரிமேலழகர் உரை இன்மை என ஒருபாவி - வறுமை என்று சொல்லப்படுவதொரு பாவி; மறுமையும் இம்மையும் இன்றி வரும் - ஒருவனுழை வருங்கால் அவனுக்கு மறுமையின்பமும் இம்மையின்பமும் இல்லையாக வரும்.
விளக்கம்:
('இன்னாமையென ஒருபாவி' என்பதற்கு மேல் ''அழுக்காறென ஒரு பாவி'' [குறள்.168] என்புழி உரைத்தாங்கு உரைக்க. மறுமை, இம்மை என்பன ஆகுபெயர். ஈயாமையானும் துவ்வாமையானும் அவை இலவாயின. 'இன்றிவிடும்' என்று பாடம் ஓதிப் 'பாவியால்' என விரித்துரைப்பாரும் உளர்.) --
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நல்குரவென்று கூறப்படுகின்ற நிகரில்லாத பாவத்தை யுடைய வன், இம்மையின் கண்ணும் மறுமையின்கண்ணும் நுகர்ச்சி யின்றி விடும் (0) தன்மம் பண்ணாமையால், மறுமையின் கண்ணும் நுகர்ச்சியில்லாமை யாயிற்று. இது நல்குரவு துன்பமாக்கு மென்றது.
1043

தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை

Importunate desire, which poverty men name,
Destroys both old descent and goodly fame.

வறுமை என்று சொல்லப்படும்‌ ஆசைநிலை ஒருவனைப்‌ பற்றினால்‌ அவனுடைய பழைமையான குடிப்‌ பண்பையும்‌ புகழையும்‌ ஒருசேரக்‌ கெடுக்கும்‌.

Hankering poverty destroys at once the greatness of (one’s) ancient descent and (the dignity ofone’s) speech.

பரிமேலழகர் உரை தல்குரவு என்னும் நசை - நல்குரவு என்று சொல்லப்படும் ஆசை; தொல் வரவும் தோலும் தொகையாகக் கெடுக்கும் - தன்னால் பற்றப்பட்டாருடைய பழைய குடிவரவினையும் அதற்கு ஏற்ற சொல்லினையும் ஒருங்கே கெடுக்கும்.
விளக்கம்:
(நசையில் வழி நல்குரவும் இல்லையாகலின், நல்குரவையே நசையாக்கி, அஃது அக்குடியின் தொல்லோர்க்கு இல்லாத இழிதொழில்களையும் இளிவந்த சொற்களையும் உளவாக்கலான், அவ்விரண்டனையும் ஒருங்கு கெடுக்கும் என்றார். ''குடிப்பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்'' [மணி 11 - 76] என்றார் பிறரும். தோலாவது ''இழுமென் மொழியால் விழுமியது நுவறல்'' [தொல். பொருள். செய்யுள். 239] என்றால் தொல்காப்பியனாரும். இதற்கு 'உடம்பு' என்று உரைப்பாரும் உளர். அஃது அதற்குப் பெயராயினும் 'உடம்பு' கெடுக்கும் என்றற்கு ஓர் பொருட்சிறப்பு இல்லாமை அறிக.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தொன்றுதொட்டு வருகின்ற குடிப்பிறப்பினையும் வடிவழகினையும் ஒருங்கு கெடுக்கும்; நல்குரவென்று சொல்லப்படுகின்ற ஆசைப்பாடு,
(என்றவாறு). நல்குரவு ஆசையைப் பண்ணுதலினால், ஆசையாயிற்று. தொல் - ஆகுபெயர். இது குலத்தினையும் அழகினையும் கெடுக்குமென்றது.
1044

இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்

From penury will spring, ‘mid even those of noble race,
Oblivion that gives birth to words that bring disgrace.

வறுமை என்பது, நல்ல குடியிற்‌ பிறந்தவரிடத்திலும்‌ இழிவு தரும்‌ சொல்‌ பிறப்பதற்குக்‌ காரணமான சோர்வை உண்டாக்கிவிடும்‌.

Even in those of high birth, poverty will produce the fault of uttering mean words.

பரிமேலழகர் உரை இற்பிறந்தார் கண்ணேயும் - இளிவந்த சொற்பிறவாத குடிப்பிறந்தார் மாட்டேயும்; இளிவந்த சொற்பிறக்கும் சோர்வு இன்மை தரும் - அது பிறத்தற்கு ஏதுவாகிய சோர்வினை நல்குரவு உண்டாக்கும்.
விளக்கம்:
(சிறப்பு உம்மை அவர்மாட்டு அது பிறவாமை தோன்ற நின்றது. இளிவந்த சொல் - இளி வருதற்கு ஏதுவாகிய சொல். அஃதாவது, 'எமக்கு ஈய வேண்டும்' என்றல். சோர்வு: தாம் உறுகின்ற துன்பம் மிகுதிபற்றி ஒரோவழித் தம் பிறப்பினை மறந்து அது சொல்வதாக நினைத்தல்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நல்குரவு, குடிப்பிறந்தார்மாட்டேயும் இளிவரவான சொற்கள் பிறக்குஞ் சோர்வினை உண்டாக்கும்,
(என்றவாறு).
1045

நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்

From poverty, that grievous woe,
Attendant sorrows plenteous grow.

வறுமை என்று சொல்லப்படும்‌ துன்ப நிலையினுள்‌ பலவகையாக வேறுபட்டுள்ள எல்லாத்‌ துன்பங்களும்‌ சென்று விளைந்திடும்‌.

The misery of poverty brings in its train many (more) miseries.

பரிமேலழகர் உரை நல்குரவு என்னும் இடும்பையுள் - நல்குரவு என்று சொல்லப்படும் துன்பம் ஒன்றனுள்ளே; பல் துன்பங்கள் சென்றுபடும் - பல துன்பங்களும் வந்து விளையும்.
விளக்கம்:
(குரை - இசை நிறை. செலவு-விரைவின்கண் வந்தது. துன்பமுந் தானும் உடனே நிகழ்தலின் நல்குரவைத் துன்பமாக்கியும் அத்துன்பமடியாகச் செல்வர் கடை நோக்கிச் சேறல் துன்பமும், அவரைக் காண்டல் துன்பமும், கண்டால் மறுத்துழி நிகழும் துன்பமும், மறாவழியும் அவர் கொடுத்தது வாங்கல் துன்பமும், அது கொடுவந்து நுகர்வன கூட்டல் துன்பமும் முதலாயின நாள்தொறும் வேறுவேறாக வருதலின், எல்லாத் துன்பங்களும் உளவாம் என்றும் கூறினார். இவை ஐந்து பாட்டானும் நல்குரவின் கொடுமை கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) வறுமை யெனப்படும் இடும்பையுள் பலவாகிய வன்மையுடைய துன்பங்கள் வந்து சோர்வுபடும்,
(என்றவாறு). இது துன்பங்கள் சென்றுள்வாமென்றது. பல்குரைத் துன்பம் - இரப்பார்க்கு உரைக்கத் துன்பம்.
1046

நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்

Though deepest sense, well understood, the poor man’s words convey,
Their sense from memory of mankind will fade away.

நல்ல நூற்‌ பொருளை நன்றாக உணர்ந்து எடுத்துச்‌ சொன்ன போதிலும்‌ வறியவர்‌ சொன்ன சொற்பொருள்‌ கேட்பார்‌ இல்லாமல்‌ பயன்படாமல்‌ போகும்‌.

The words of the poor are profitless, though they may be sound in thought and clear in expression.

பரிமேலழகர் உரை நற்பொருள் நன்கு உணர்ந்து சொல்லினும் - மெய்ந்நூற் பொருளைத் தெளிய அறிந்து சொன்னாராயினும்; நல் கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும் - நல்கூர்ந்தார் சொல்லுஞ் சொல் பொருளின்மையைத் தலைப்படும்.
விளக்கம்:
(பொருளின்மையைத் தலைப்படுதலாவது, 'யாம் இவர் சொல்லியன விரும்பிக் கேட்குமாயின் கண்ணோடி இவர் உறுகின்ற குறை முடிக்க வேண்டும்' என்று அஞ்சி, யாவரும் கேளாமையின், பயனில் சொல்லாய் முடிதல். கல்வியும் பயன்படாது என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நல்ல பொருளினை மிகவும் ஆராய்ந்து சொல்லினும், நல்கூர்ந்தார் சொல்லும் பொருள் சோர்வு படும்,
(என்றவாறு). ஏற்றுக்கொள்வாரில்லை யென் றவாறாயிற்று. இது கல்வி கெடும்; சுற்றத் தாரும் கைவிடுவ ரென்றது.
1047

அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்

From indigence devoid of virtue’s grace,
The mother e’en that bare, estranged, will turn her face.

அறத்தோடு பொருந்தாத வறுமை ஒருவனைச்‌ சேர்ந்தால்‌ பெற்ற தாயாலும்‌ அவன்‌ அயலனைப்‌ போல்‌ புறக்கணித்துப்‌ பார்க்கப்படுவான்‌.

He that is reduced to absolute poverty will be regarded as a stranger even by his own mother.

பரிமேலழகர் உரை அறம் சாரா நல்குரவு - அறத்தோடு இயைபில்லாத நல்குரவு உடையான்; ஈன்ற தாயானும் பிறன் போல நோக்கப்படும் - தன்னை ஈன்ற தாயானும் பிறனைக் கருதுமாறு போலக் கருதி நோக்கப்படும்.
விளக்கம்:
(அறத்தோடு கூடாமை - காரண காரியங்களுள் ஒன்றானும் இயையாமை. நல்குரவு - ஆகுபெயர். சிறப்பு உம்மை, அவளது இயற்கையன்புடைமை விளக்கி நின்றது. கொள்வதின்றாதலேயன்றிக் கொடுப்பது உண்டாதலும் உடைமையின், அது நோக்கிச் சுற்றத்தார் யாவரும் துறப்பர் என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) அறத்தோடு இயைபில்லாத நல்குரவுடையான் தன்னை யீன்ற தாயானும் பிறனைக் கருதுமாறு போலக் கருதி நோக்கப்படும்,
(என்றவாறு).
1048

இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு

And will it come today as yesterday,
The grief of want that eats my soul away?

நேற்றும்‌ கொலை செய்ததுபோல்‌ துன்புறுத்திய வறுமை இன்றும்‌ என்னிடம்‌ வருமோ! (என்று வறியவன்‌ நாள்தோறும்‌ கலங்கி வருந்துவான்‌;

Is the poverty that almost killed me yesterday, to meet me today too ?

பரிமேலழகர் உரை நெருநலும் கொன்றது போலும் நிரப்பு - நெருநற்றும் கொன்றது போன்று எனக்கு இன்னாதவற்றைச் செய்த நல்குரவு; இன்றும் வருவது கொல்லோ - இன்றும் என்பால் வரக்கடவதோ; வந்தால் இனி யாது செய்வேன்?
விளக்கம்:
(அவ் வின்னாதனவாவன, மேற்சொல்லிய (குறள். 1045) துன்பங்கள், நெருநல்மிக வருந்தித் தன் வயிறு நிறைத்தான் ஒருவன் கூற்று.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) இன்றும் வரும்போலும்; நெருஞற்றும் என்னைக் கொன்றது போ லுற்ற நிரப்பிடும்பை ,
(என்றவாறு) இது நாடோறும் அச்சு முறுத்து மென்று கூறிற்று.
1049

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது

Amid the flames sleep may men’s eyelids close,
In poverty the eye knows no repose.

ஒருவன்‌ நெருப்பினுள்‌ இருந்து தூங்குதலும்‌ முடியும்‌; ஆனால்‌ வறுமை நிலையில்‌ எவ்வகையாலும்‌ கண்மூடித்‌ தூங்குதல்‌ அரிது.

One may sleep in the midst of fire; but by no means in the midst of poverty.

பரிமேலழகர் உரை நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் - மந்திரம் மருந்துகளான் ஒருவனுக்கு நெருப்பிடையே கிடந்து உறங்கலும் ஆம்; நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது - நிரப்பு வந்துழி யாதொன்றானும் உறக்கம் இல்லை.
விளக்கம்:
('நெருப்பினும் நிரப்புக் கொடிது,' என்றவாறாயிற்று. இதுவும் அவன் கூற்று. இவை நான்கு பாட்டானும் நல்கூர்ந்தார்க்கு உளதாம் குற்றம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நெருப்பினுள்ளே கிடந்து உறங்குதலும் ஆகும்; நிரப்பிடும்பை யுள் உறங்குதல் யாதொரு முகத்தினாலும் அரிது,
(என்றவாறு). இஃது உறங்கவொட்டா தென்றது.
1050

துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று

Unless the destitute will utterly themselves deny,
They cause their neighbour’s salt and vinegar to die.

நுகரும்‌ பொருள்‌ இல்லாத வறியவர்‌ முற்றுந்‌ துறக்கக்‌ கூடியவராக இருந்தும்‌ துறக்காத காரணம்‌, உப்புக்கும்‌ கஞ்சிக்கும்‌ எமனாக இருப்பதே ஆகும்‌.

The destitute poor, who do not renounce their bodies, only consume their neighbour’s salt and water.

பரிமேலழகர் உரை துப்புரவு இல்லார் துவரத் துறவாமை - நுகரப்படும் பொருள்களில்லாதார் தம்மாற் செயற்பாலது முற்றத் துறத்தலேயாகவும் அது செய்யாதொழிதல்: உப்பிற்கும் காடிக்கும் கூற்று - பிறர் இல்லினுளவாய உப்பிற்கும் காடிக்கும் கூற்றாம்.
விளக்கம்:
(மானம் அழியாமையின் செயற்பாலது அதுவேயாயிற்று. முற்றத் துறத்தல் - சுற்றத்தானே விட்டமையின் ஒருவாற்றால் துறந்தாராயினார். நின்ற தம் உடம்பினையும் துறத்தல். அது செய்யாது கொண்டிருத்தல் இரண்டனையும் மாளப்பண்ணுதலின், அதனை அவற்றிற்குக் கூற்று என்றார். இனி, 'முற்றத்துறத்தலாவது துப்புரவில்லாமையின் ஒருவாற்றால் துறந்தாராயினார், பின் அவற்றை மனத்தால் துறவாமை' என்று உரைப்பாரும் உளர். இதனான் அஃது உளதாயவழிச் செய்வது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நுகரும்பொருள் இல்லாதார் பொருளின்மேற் பற்றறத் துறவாது வருந்துதல், உப்பிற்குங் காடிக்குங் கேடாக வேண்டியம்,
(என்றவாறு). துறப்பாராயின், நன்றென்றவாறாயிற்று. நல்கூர்ந்தார்க்குத் துன்ப முறுத லன்றி, இன்ப நுகரும் நெறியுளவோ என்றார்க்கு , இது துறப்பாராயின், இன்ப முறலா மென்று கூறிற்று.


transliteration

inmaiyin innaathathu yaathaenin inmaiyin
inmaiyae innaa thathu

inmai yenavoru paavi marumaiyum
immaiyum inri varum

tholvaravum tholum kedukkum thokaiyaaka
nalkuravu yennum nasai

itrpirandhthaar kannaeyum inmai ilivandhtha
sotrpirakkum chorvu tharum

nalkuravu yennum idumpaiyul palkuraith
thunpangkal senru padum

natrporul nankunarndhthu sollinum nalkoorndhthaar
sotrporul chorvu padum

aranjsaaraa nalkuravu eenrathaa yaanum
piranpola nokkap padum

inrum varuvathu kollo naerunalum
konrathu polum nirappu

naeruppinul thunjchalum aakum nirappinul
yaathonrum kanpaadu arithu

thuppura villaar thuvarath thuravaamai
uppitrkum kaatikkum kootrru